பீகார் மாநிலம், சுபால் மாவட்டம், மாரிச்சா அருகே கோசி ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை பாலத்தின் இணைப்புப் பகுதி இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகள், தன்னார்வலர்களின் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் கவுசல் குமார் கூறுகையில்,
“நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், மரிச்சா அருகே உள்ள பகூர் மற்றும் பேஹ்ஜா பகுதியில் விபத்து நடந்த இடத்துக்குச் சென்றுள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் பலர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே, பீகாரின் பா பாகல்பூர், ககாரியா மாவட்டங்களை இணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் மீது கட்டுப்பட்டு வந்த பாலம் கடந்த 2014 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளானது. பின்னர் 2019ல் கட்டுமான பணிகள் நிறைவடைந்தது தற்போது மீண்டும் கட்டுமான பணியில் உள்ள பாலம் இடிந்து விழுந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது