states

img

பீகார்: கடந்த 11 நாள்களில் 5 பாலம் இடிந்து விழுந்து விபத்து

பீகாரின் மதுபானி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் கடந்த 11 நாள்களில் மட்டும் இதுபோல பாலம் இடிந்து விழுவது 5-ஆவது நிகழ்வாகும்.

இதேபோன்று கிருஷ்ணகஞ்ச் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரு பாலம் இடிந்து விழுந்தது.

பீகாரின் அராரியா, சிவான் ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் இதேபோன்று மூன்று பாலங்கள் இடிந்து விழுந்தன.சமீப காலமாக மாநிலத்தில் ஏராளமான பாலம் இடிந்து விழுந்த சம்பவங்கள் பொதுப்பணித்துறையின் கட்டுமானப் பணிகளின் தரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

இந்த விபத்துகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், மக்களிடையே ஆளும் பாஜக, நிதிஷ்குமார் கூட்டணி அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

 

;