பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத் தின் சுல்தான்பூர் லோதி அருகே குருத்வாராவின் உரிமை தொடர் பாக நிஹாங் சீக்கியர் பிரிவின் இரு குழுக்களிடையே காலங்காலமாக தக ராறு இருந்து வந்தது. 2 நாட்களுக்கு முன் பாபா மான்சிங் தலைமையிலான ஒரு பிரி வினர் குருத்வாராவைக் கைப்பற்ற முயன்ற பொழுது, சாந்த் பல்பீர் சிங் தலைமையிலான பிரிவு எதிர்ப்பு தெரி விக்க புதனன்று இரவு இரு பிரிவுகளுக் கும் கடும் மோதல் ஏற்பட்டது.
சம்பவ இடத்தில் அமைதியை நிலை நாட்ட போலீசார் அங்கு சென்றனர். பாபா மான் சிங் தரப்பு சீக்கியர் ஒருவர் திடீ ரென போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பலியானார். 2-க்கும் மேற் பட்ட போலீஸ்காரர்கள் படுகாயமடைந்த னர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து 500-க்கும் மேற் பட்ட போலீசார் கபுர்தலா மாவட்ட குருத்வாரா பகுதியில் குவிக்கப்பட்டுள்ள னர். இந்த சம்பவத்தால் கபுர்தலா மாவட் டம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.