பஞ்சாப் மாநிலத்தில் மேற்கு ஜலந்தர் தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட மொஹிந்தர் பால் பகத் 37,323 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் மேற்கு ஜலந்தர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஜூன் 10-ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் மொஹிந்தர் பால் 55,246 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஷேதல் அஙுரல் 17921 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சுரிந்தர் கவுர் 16757 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளனர்.