மனித உரிமை ஆர்வலரும், தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான ஜி.என்.சாய்பாபா(54) உடல்நலக்குறைவால் நேற்றிரவு காலமானார்
பித்தப்பை தொற்று மற்றும் பிற பாதிப்புகள் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை இரவு அவர் காலமானார்.
மாவோயிஸ்ட் இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக மோடி அரசால் 2014-ஆம் ஜி.என்.சாய்பாபா சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் கடந்த 2017-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த நாகபுரி செஷன்ஸ் நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இத்தீர்ப்புக்கு எதிரான சாய்பாபாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி கடந்த மார்ச் மாதம் விடுவித்தது. சுமார் 10 ஆண்டு கால சிறைவாசத்துக்கு பின்னர் அவர் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் மரணத்துக்கு மோடி அரசாங்கமே பொறுப்பு. 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறையில் தள்ளப்பட்டார். ஆண்டு கணக்கில் பிணை மறுக்கப்பட்டது. கடுமையான உடல் பாதிப்புகள் இருந்தும் மருத்துவ உதவி மறுக்கப்பட்டது. இறுதி வரை நீதிக்காக நின்ற அவரது தைரியம் போற்றுதலுக்குரியது என சிபிஎம் மத்தியக்குழு தெரிவித்துள்ளது.