இந்திய நிறுவனங்களில் தலைமைப் பதவி களுக்கு முன்னேறுவதில் பெண்கள் வெளிப்படையான சவாலை எதிர்கொள்கின்ற னர். கார்ப்பரேட் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் பாலின வேறுபாடுகள் நிலவுகின்றன என்கிறது லிங்க்ட்இன் மற்றும் தி குவாண்டம் ஹப் அறிக்கை. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பெண்களின் அதிகாரம் மற்றும் பாலின சமத்துவம் அவசியம். சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்பட்டாலும் பாலின வேறுபாடுகள் தொடர்கின்றன.
தேக்கநிலை
இதுதொடர்பாக லிங்க்ட்இன் மற்றும் தி குவாண்டம் ஹப் அறிக்கையின் சுருக்கம்:- குறிப்பாக தலைமைப் பாத்திரங்களில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், தலைமைப் பதவி களில் பெண்களின் விகிதம் தேக்க நிலை யிலேயே உள்ளது. அதிகமான பெண்கள் பணியில் சேர்ந்தாலும் பல ஆண்டுகளாக பெண்களின் பிரதிநிதித்துவம் ஒட்டுமொத்தமாக அதிகரித்துள்ளதாக தரவு கள் கூறுகின்றன. 2016-ஆம் ஆண்டு 23.9 சத வீதமாக இருந்த பெண்களின் பிரதிநிதித்துவம் 2024-ஆம் ஆண்டு 26.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேம்பாடில்லை ஆனால் தலைமைப் பொறுப்புகளுக்கு செல்வதில் உள்ள இடைவெளி அப்படியே உள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, இந்தியா வில் பெண்களின் தலைமைப் பிரதிநிதித்துவம் மேம்படவில்லை. தலைமைப் பொறுப்பில் பெண்கள் 12 சதவீதமே உள்ளனர். மூத்த தலைமைப் பதவிகளில் பெண்களின் சதவீதம் 2016- இல் 16.6, 2023-இல் 18.7சதவீதமாக அதி கரித்தது. ஆனால் 2024-இல் 18.3 சதவீமாகக் குறைந்துள்ளது. இயக்குநர் பதவிகளில் 20.1சதவீதம், துணைத் தலைவர் பதவிகளில் 17.4 சதவீதம் மற்றும் சில பொறுப்புகளில் 15.3 சதவீதம் ஆக உள்ளது. கட்டுமானம், எண்ணெய், எரிவாயு, சுரங்கத்துறைகளில் மிகக் குறைந்த அளவே பெண் பிரதிநிதித்துவம் உள்ளது. இந்தத் துறைகளில் பெண்களின் பங்களிப்பு வெறும் 11 சதவீதம் மட்டுமே.
புறக்கணிக்கப்படல்
தலைமைப் பதவிகளுக்குப் பயிற்சி பெறவோ, கல்வி கற்கவோ பெண்களுக்கு குறைந்த வாய்ப்புகளே உள்ளன. நிறு வனங்களில் முடிவெடுக்கும் செயல்பாட்டில், குறிப்பாக பணியாளர்களை தலைமைப் பதவி களுக்கு பணியமர்த்துதல் மற்றும் ஊக்குவிப்பது தொடர்பான விஷயங்களில் பாலினவாதம் மேலோங்கி உள்ளது. இந்தத் துறையில் பெண்கள் புறக்கணிக்கப்படலாம். பெண்கள் தலைமைப் பதவிகளுக்கு செல்வதை கடினமாக்கும் மற்றொரு காரணி குடும்பப் பிரச்சனை. அதாவது, வேலை-வாழ்க்கை சமநிலை, முதியோரைக் கவனிப்பது ஆகியவை காரணங்களாகக் கூறப்படுகின்றன. தலைமைப் பாத்திரங்களில் பெண்களின் தேக்க நிலையை நிவர்த்தி செய்ய, பாலின வேறுபாடுகளை நிவர்த்தி செய்யும் கொள்கை களையும் திட்டங்களையும் இந்தியா செயல்படுத்த வேண்டும். பெண்களின் சாதனைகள் மற்றும் முன்மாதிரிகளைக் கொண்டாடுவது இளம் பெண்கள் மற்றும் பெண்களை தலைமைப் பாத்தி ரங்களைத் தொடர ஊக்குவிக்கும். வேலை-வாழ்க்கை ஆகியவற்றில் சமநிலையை மேம்படுத்த வேண்டும். பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் அவசியமான ஒன்று என்று கூறும் லிங்க்ட்இன் இந்தியாவின் அதிதி ஜா. இந்த அறிக்கை பாலின வேறுபாடுகளைக் குறைப்பதற்கான உறுதியான படிகளை ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.