புதுதில்லி, அக். 6 - ‘பாஜக - ஆர்எஸ்எஸ்-சை வெளியேற்றுவோம்; பெண் களைக் காப்போம்; தேசத்தைக் காப்போம்’ என்ற முழக்கத்து டன் 25க்கும் மேற்பட்ட மாநிலங் களிலிருந்து தலைநகர் தில்லியில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஜந்தர்-மந்தரில் பேரணியாக சென்றனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அக்டோபர் 5 அன்று நடத்திய இந்த மாபெரும் தேசியப் பேரணியில் பங்கேற்று உரையாற்றிய தலைவர்கள், பாஜக - ஆர்எஸ்எஸ் அர சாங்கத்தின் எதேச்சதிகார தாக்கு தல்களை, மக்கள்விரோத - பெண்கள் விரோத கொள்கை களை கடுமையாக சாடினர். ‘நியூஸ்கிளிக்’ இணைய ஏடு மற்றும் அதன் பத்திரிகை யாளர்கள் உட்பட ஏராளமான செயற்பாட்டாளர்களை, ஜாமீ னில் வெளிவர முடியாத - எவ்வித குற்றப்பத்திரிகையுமின்றி, விசாரணையுமின்றி பல்லாண்டுக் கணக்கில் சிறையில் அடைக்க வகை செய்கிற ‘உபா’ சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது மோடி அரசின் பாசிசத் தன்மை கொண்ட முகத்திற்கு ஓர் உதாரணம் என்றும் அவர்கள் விமர்சித்தனர்.
நாட்டின் பல மாநிலங்களில் கடந்த 3 மாத காலத்திற்கும் மேலாக ஒன்றிய மோடி அரசின் பெண்கள் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதி ராக, பல வடிவங்களில் பிரச்சா ரம் நடத்திய மாதர் சங்கம், அதன் முத்தாய்ப்பாக தில்லி பேரணி யை நடத்தியது. இப்பேரணி - பொதுக் கூட்டத்திற்கு மாதர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் பி.கே.ஸ்ரீமதி தலைமையேற்றார். பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே, அகில இந்திய துணைத் தலைவர் சுபாஷினி அலி, மேற்குவங்க மாநில செய லாளர் கன்னிகா கோஷ், திரிபுரா மாநிலத் தலைவர் ரமணி தேவ் வர்மா, கேரள மாநிலச் செயலா ளர் சி.எஸ்.சுஜாதா உள்ளிட் டோர் உரையாற்றினர். இப்பேரணியில் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன், அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, தமிழ்நாடு மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.ராதிகா, மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், ஆர்.சசிகலா, புதுச்சேரி மாநில செய லாளர் இளவரசி உட்பட தமிழ்நாடு, புதுச்சேரியிலிருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். முன்னதாக இப்பேரணி-பொதுக்கூட்டத்திற்கு தில்லி காவல்துறை அனுமதி மறுத்தது. தலைவர்கள் தலையிட்ட பின்னர் ஜந்தர் மந்தரில் பொதுக்கூட்டம் மட்டும் நடத்திக் கொள்ளலாம் என கூறியது. எனினும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த மாதர் சங்கத்தினர், போலீஸ் தடையையும் மீறி தனித்தனி பேரணியாக கோஷமிட்டவாறே ஜந்தர்மந்தரை வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.