புதுதில்லி, பிப்.8- டிஜிட்டல் எஃப்எம் மற்றும் அகில இந்திய வானொலியை நவீனமயமாக்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா என்று மக்களவையில் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி யெழுப்பினார். இதற்குப் பதிலளித்த ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், நவீனமயமாக்கல் பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மாறனுடன்இந்த விவகாரம் குறித்து மேலும் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.