புதுதில்லி,ஜன.29- மாநிலங்கள் 15-18 வயதானோருக்குத் தடுப்பூசிகள் செலுத்துவதைத் துரிதப்படுத்த வேண்டும் என ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.இதனை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி மாநிலங்களில் தீவிரமாக நடைபெறுகிறது. மூன்றாம் அலை கொரோனா பரவலில் சிறார்கள் அதிகம் பாதிப்பு அடைய வாய்ப்புள்ளது. இதனால் ஒன்றிய அரசு 15-18 வயதானோருக்கு கொ ரோனா தடுப்பூசி போட அனுமதி அளித்துள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா 15-18 வயதானோ ருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணியைத் துரிதப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.