states

img

விஐபி வசூலுக்காக மக்கள் உயிரைப் பறித்த உ.பி.,பாஜக அரசு

அலகாபாத் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடை பெற்று வரும் மகா கும்ப மேளாவில் புதனன்று அதிகாலை  நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியாகியுள்ளனர். 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. விஐபி வசூல் மூலம் கல்லா கட்டும் முனைப்பில் உத்தரப்பிரதேச பாஜக அரசு சாமானிய மக்களை புறக்கணித்ததன் காரணமாகவே 40 உயிர் பறிபோயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்லா கட்டுவதிலேயே குறி... 12 ஆண்டுக்கு ஒருமுறை நடை பெறும் கும்பமேளாவில் ஜனவரி 13ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு 10 லட்சம் பேர் திரிவேணி சங்க மத்தில் நீராடி வருகின்றனர். பாஜக - ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்து வா தலைவர்கள் மற்றும் நிர்வாகி கள், ஒன்றிய அமைச்சர்கள், அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களுக்காக மட்டுமே சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது உத்த ரப்பிரதேச பாஜக அரசு. ஆனால் சாமானிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை. குறிப்பாக திரி வேணி சங்கமத்தில் நீராட சிறப்பு விஐபி வசதிக்கு தனிக்கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படு கிறது. விஐபி நுழைவுக்கு பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக் கப்படுகிறது. தினமும் பல கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதால் விஐபி நுழைவுக்கு மட்டும் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது உத்தரப்பிரதேச பாஜக அரசு. அதாவது விஐபி நுழைவுப் பகுதியில் மட்டும் பிரம்மாண்ட தடுப்புகள் மற்றும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்கள் செல்லும் பகுதி கள் சாதாரண நிலையில் உள்ளது. போதுமான பாதுகாப்பு அளிக்கப் படாததால் மவுனி அமாவாசை நாளான புதனன்று அதிகாலை கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 40 உயிர் பறிபோகியுள்ளது.

விபத்திலும் மோடியை முன்னிலைப்படுத்தும் ஆதித்யநாத்

கும்பமேளா கோர விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. அங்கு சென்றுள்ள தங்களது குடும்பம் மற்றும் உறவினர்க ளின் நிலைமை தொடர்பாக வடமாநிலங்களில் பதற்ற மான சூழல் நிலவி வருகி றது. ஆனால் உத்தரப்பிர தேச பாஜக முதல்வரும், கோ ரக்பூர் மடச் சாமியாருமான ஆதித்யநாத் செய்தியாளர் கள் சந்திப்பின் போது, “கும்பமேளா விபத்து தொடர் பாக பிரதமர் மோடி ஆழ்ந்த துக்கம் அடைந்துள்ளார். ஒரு மணிநேரத்திற்கு 2 தடவை போன் செய்து நிலைமையை கேட்டறிந்தார்” என விபத்தி லும் பிரதமர் மோடி புகழ்பாடி, அவரை முன்னிலைப்படுத்தி யுள்ளார். ஆனால் கும்ப மேளா கோர விபத்தின் நிலைமை தொடர்பாகவும், தற்போது அங்கு இருக்கும் மக்கள் பாது காப்பு குறித்தும் ஆதித்ய நாத் ஒரு மாநில முதல்வர் என்ற அடிப்படையில் பெரிய ளவில் பேசவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கும்பமேளாவை ஏன் நிறுத்தவில்லை?

ஒரு நிகழ்ச்சியில் அல்லது விளையாட்டு நிகழ்வில் உயிர்போகும் அளவிற்கு விபத்து ஏதேனும் நிகழ்ந்தால் உடனடியாக அந்நிகழ்வு நிறுத்தப்படும். உதாரணமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக திருவிழா நிறுத்தப்படும். உரிய கட்டுப்பாட் டுக்குப் பின்னர் அடுத்தாண்டு தான் திருவிழா நடத்தப்படும். ஆனால் 40 பேர் பலி, 200 பேர் காயம் என கோர விபத்து நிகழ்ந்தும் கும்பமேளா நிகழ்வை உத்தரப்பிரதேச பாஜக அரசு ரத்து செய்யவில்லை. அதே போல ஒன்றிய மோடி அரசும் இரங்கலோடு கும்பமேளா நிகழ்வை தொடர அனுமதி வழங்கியுள்ளது. விபத்து நடந்து அடுத்த 4 மணி நேரத்திலேயே, அதாவது புதனன்று மதியம் 12 மணிக்கு மேல் மீண்டும் மவுனி அமாவாசை குளியலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.

அறிவிக்கப்படாத  எமர்ஜென்சி பகுதியாக மாறிய கும்பமேளா

கும்பமேளாவில் உள்ள பிரதான மருத்துவமனைக்குள் காலை நேரம் முழுவதும் ஆம்புலன்ஸ்கள் உள்ளே நுழைவதும், வெளியே செல்வதுமாக இருந்ததை பார்க்க முடிந்தது. அந்த மருத்துவமனையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. ஊடகத்தினர் உட்பட யாரும் மருத்துவமனைக்குள் நுழைய அனுமதிக் கப்படவில்லை. அதே போல திரிவேணி சங்க மம் பகுதிகளிலும் ஊடகத்தினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோர விபத்துக்குப் பின் கும்பமேளா பகுதியை அறிவிக்கப்படாத எமர்ஜென்சி பகுதியாக உத்தரப்பிரதேச பாஜக அரசு மாற்றியுள்ளது. இதன் காரண மாகவே புதனன்று இரவு வரை உயிர் இழந்தோரின் எண்ணிக்கை மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை  தொடர்பாக உறுதியான அளவில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

பாதுகாப்புப் படையினர் எங்களை கண்டுகொள்ளவில்லை;  உயிர்பிழைத்த  பெண் கண்ணீர்

கூட்ட நெரிசலில் சிக்கி உயிர்பிழைத்த  பெண் ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி முகமையிடம் கூறு கையில்,”தன்னைக் காப்பாற்று மாறு பாதுகாப்புப் படையின ரிடம் முறையிட்டேன். ஆனால் பாதுகாப்புப் படையினர் மற்றும் கும்பமேளா நிர்வாகத்தைச் சேர்ந்த யாரும் தன்னைக் காப் பாற்ற வரவில்லை” என அவர் கூறினார். மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரைச் சேர்ந்த மற்றொரு நபர்,”கும்பமேளாவில் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை, யாரும் உதவ வரவில்லை, பலர் காயமடைந்து உயிருக்குப் போ ராடினர். தனது தாய் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தனக்குத் தெரியாது” என கண்ணீ ருடன் செய்தியாளர்களிடம் கூறினார்.