states

வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

புதுதில்லி, அக்.27- விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதால் அதுகுறித்து, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் வருவதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான பதிவுகள், தகவல்களை ஃபேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் உடனே நீக்க வேண்டும் என்றும் பதிவுகளை நீக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் நிலையில் சமூக வலைதளங்களுக்கு ஒன்றிய அரசு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.