states

img

ஆளுநர்களை புல்டோசர்களாக பயன்படுத்துகிறது ஒன்றிய அரசு

கம்மம், ஜன.19- தெலுங்கானாவின் சிவந்த பூமியாம் கம்மம் நகரில் இருந்து, தேசத்தின் விடுதலையைப் பாது காப்பதற்கான ஒன்றுபட்ட போராட்டம் தொடங்கியது. உரிமைப் போராட்டத் திற்காக, விவசாயிகளின் ரத்தத் தாலும், வியர்வையாலும் சிவந்த  மண், வகுப்புவாத - பாசிச சக்திக்கு எதிராக ஓங்கி ஒலித்தது. எதிர்கட்சிகளின் உரத்த குரலாக கம்மம் நகரில் புதனன்று (ஜன.18) மாலை நடந்த பிரம்மாண்ட பேரணி - பொதுக்கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி  வைத்  தார். தில்லி விவசாயிகள் போராட்டத் திற்குப் பிறகு நாட்டிலேயே அதிக அளவில் திரண்ட மக்கள் கூட்டம் இது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். தெலுங்கானாவின் கம்மம் நகரில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ஏற்பாடு செய்த இப்பேரணி எதிர்க் கட்சித் தலைவர்களின் கூட்டமாகவும் மாறியது. மாலையில் கூட்டம்  தொடங் கிய பிறகும், தெலுங்கானாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் மற்றும் முதியவர்கள் மைதா னத்தில் குவிந்தனர். பேரணியில், பாஜ கவுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டம் என்ற முழக்கம்எழுப்பப்பட்டது. பாஜக ஆட்சி ஜனநாயகத்திற்கும், நாட்டுக்கும் ஆபத்து என்று பினராயி விஜயன் கூறினார். முதல்வர்கள் கே.சந்திரசேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் சிங் மான், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, சிபிஐ(எம்) தெலுங்கானா மாநில செயலாளர் தம்மினேனி வீரபத்ரம் உள்ளிட்டோர் பேசினர்.

ஒன்றுபடுவோம்:  பினராயி விஜயன் அழைப்பு

சுதந்திரப் போராட்டத்தின் போது பெற்ற உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றுபட்ட போராட்டம் அவசியம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: சுதந்திரப் போராட்டத்துக்கு துரோகம் இழைத்து தேசத் தந்தையை சுட்டுக் கொன்ற சித்தாந்தம்தான் இன்று  நாட்டை ஆள்கிறது. சுதந்திரப் போராட்டத் தின் மூலம் நாம் பெற்ற மதச்சார் பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சமூக நீதி, சமத்துவம் என அனைத்து உரிமைகளையும் பாஜக சிதைக்கிறது. நாட்டின் இந்த பின்தங்கிய நிலையை எதிர்த்துப் போராடுவது நமது பொறுப்பு. மக்கள் போராட்ட வர லாற்றைக் கொண்ட தெலுங்கானாவின் கம்மம் மண்ணில் இருந்து இதற்கான கூட்டு எதிர்ப்பு துவங்குகிறது.

ஆளுநர்களின் அட்டூழியம்

 ஆளுநர்களைப் பயன்படுத்தி மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் முயற்சி நடைபெறுகிறது. உயர்கல்வித்துறையின் மேம்பாட்டை ஆளுநர் தவறாக பயன்படுத்துகிறார். மாநில  சட்டமன்றங்களில்  நிறைவேற்றப் பட்ட மசோதாக்கள் நிறுத்தி வைக்கப் படுகின்றன. ஜனநாயகத்தையும் நாட்டையும் காப்பாற்ற, இதுபோன்ற நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது.  ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசுகள் குதிரை பேரம்  மூலம் கவிழ்க்கப்படுகின்றன. வேற்று மையில் ஒற்றுமை என்பது முத்திரை யாக இருக்கும் நமது நாட்டில் இந்தி யை திணிக்கும் முயற்சி நடக்கிறது. நீதித்துறையின் சுதந்திரம் கூட தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பல மொழிகள் மற்றும் கலாச்சாரங் களைக் கொண்ட சமஸ்தானங்கள் சுதந்திரப் போராட்டத்தின்போது இந்தியா என்ற ஒரே கருத்தாக்கமாக உருவாக்கப்பட்டது. இந்தப் போரா ட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர் களால், தீவிர இந்துவாக இருந்த தேசத்தந்தை கொல்லப்பட்டார். இந்து நம்பிக்கைக்கும் இந்துத்வாவுக்கும் உள்ள வேறுபாடு இதிலிருந்து தெளி வாகிறது. ஒன்றிய அரசின் பிளவு படுத்தும் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் கோபத்தை திசை திருப்பும்  வகையில் இந்துத்துவ வாதத்தை முன்னிறுத்தி நாட்டில் வகுப்புவாத பிள வை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதற்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.