288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடு கிறது. 2 தொகுதியில் (தஹானு (பழங்குடி), கல்வான் (பழங்குடி) மகா விகாஸ் அகாதி எம்விஏ) கூட்டணியுடனும், ஒரு தொகுதி யில் (சோலாப்பூர் சிட்டி மத்தியத் தொகுதி) தனித்தும் போட்டியிடுகிறது. இந்நிலையில், சோலாப்பூர் நகர மத்திய சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாள ரும், முன்னாள் எம்எல்ஏவுமான நரசய்யா ஆதமை ஆதரித்து லிமாயேவாடி, மௌ லாலி ஆகிய 2 இடங்களில் மாபெரும் பிரச்சா ரப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. வாக்குகளை பணத்திற்காக விற்க வேண்டாம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த 2 பிரச்சாரப் பொதுக்கூட்டங்களிலும் சிபிஎம் மகாராஷ்டிரா மாநிலச் செயலாளர் டாக்டர்.உதய் நார்கர், மத்தியக்குழு உறுப்பி னரும், அகில இந்திய மாதர் சங்க பொதுச் செயலாளருமான மரியம் தாவ்லே, சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் எம்.எச்.ஷேக், வாலிபர் சங்க மாநிலப் பொதுச்செய லாளர் தத்தா சவான் உள்ளிட்டோர் நர சய்யா ஆதமிற்கு ஆதரவாக உரை யாற்றினர். பாஜக - மகாயுதி ஆட்சியின் அடக்கு முறைக் கொள்கைகளுக்கு எதிராகவும், நரசய்யா ஆதமிற்கு ஆதரவாக பொதுக் கூட்டங்களில் திரண்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களை டாக்டர் உதய் நார்கர் பாராட்டினார். மேலும் ஆர்எஸ் எஸ்-பாஜகவின் போட்டி வகுப்புவாதத்தை யும், ஏஐஎம்ஐஎம் (ஓவைசி) கட்சியின் மதம்சார்ந்த செயல்பாட்டையும் டாக்டர் உதய் நார்கர் விமர்சித்து பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றினார். அதே போல மரியம் தாவ்லே மக்களுக் கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டினார். கொரோனா நெருக்கடியின் போது சிபிஎம் கட்சி மக்களுக்கு உதவுவதில் தீவிர மாக இருந்ததையும், ஏழைப்பெண் தொழி லாளர்களுக்கு ஆசியாவின் மிகப்பெரிய வீட்டுமனை வளாகத்தைக் கட்டுவதற் கான சிபிஎம் மேற்கொண்ட முயற்சியை யும், தொழிலாளர்கள், விவசாயிகள், மாண வர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக் காக சிபிஎம் மற்றும் நரசய்யா ஆதமின் தொடர்ச்சியான போராட்டங்களை பொ துக்கூட்ட மேடையில் மக்களுக்கு நினைவு படுத்தினார். இறுதியாக பெண் வாக்கா ளர்கள் தங்கள் வாக்குகளை பணத்திற்காக விற்க வேண்டாம் என மரியம் தாவ்லே கேட்டுக் கொண்டார்.
முஸ்லிம் மக்கள் அமோக ஆதரவு
சோலாப்பூர் நகர மத்திய சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளரான நரசய்யா ஆதமை ஆத ரித்து லிமாயேவாடி, மௌலாலி ஆகிய இடங்களில் நடை பெற்ற 2 பிரச்சாரப் பொதுக்கூட்டங்களிலும் சிபிஎம் ஊழி யர்கள், அனைத்து தரப்பு மக்களும் திரளாக பங்கேற்றனர். அதே போல 2 பிரச்சாரப் பொதுக்கூட்டங்களிலும் முஸ்லிம் மக்களும் அதிகமான அளவில் திரண்டு நரசய்யா ஆதமிற்கு அமோக ஆதரவை வழங்கினர்.