states

img

திரிணாமுல் கட்சியினர் இடையூறு செய்கிறார்கள்!

மக்கள் பிரதிநிதி யாகிய தன்னை மேற்கு வங்கத்தில் பணி செய்ய விடாமல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினா் இடையூறு ஏற்படுத்திய தாகவும் இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் மக்க ளவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார். மேற்கு வங்க நகராட்சித்தேர்தலில் போலீசார் முன்னிலையில் தன்னை பணி செய்ய விடா மல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தடுத்ததாக சவுத்ரி தனது குற்றச்சாட்டில் தெரிவித் துள்ளார்.