புதுதில்லி, ஆக.13- ஆகஸ்ட் 14 திங்களன்று இந்தியா, சீனா 19-வது சுற்று கார்ப்ஸ் (பட்டா லியன்) கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை நடத்த உள்ளன கிழக்கு லடாக்கில் நிலவும் பிரச்ச னைகளைத் தீர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தியாவும் சீனா வும் ஆக.14 (இன்று) சுஷுலில் 19-வது சுற்று கார்ப்ஸ் கமாண்டர்கள் இடையிலான பேச்சுவார்த்தையை நடத்த உள்ளதை பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர் கள் கூட்டத்திற்கு முன்னதாக ஏப்ரல் 23 அன்று சீன எல்லைக்கு அரு கிலுள்ள சுஷுல் மோல்டோ-வில் 18- ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடை பெற்றது. 19-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை க்கு இந்தியத் தரப்பில் கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ரஷிம் பாலி தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது 2020-ஆம் ஆண்டு ஏப்ரலில் இருந்த நிலையை தொடருவோம் என்றும் டெப்சாங், டெம்சோக் பகுதிகளி லிருந்து படைகளை விலக்கிக்கொள் வது குறித்து பேசப்படும் எனவும் பாது காப்புத்துறை வட்டாரங்கள் தெரி விக்கின்றன. 2020-ஆம் ஆண்டு முதல் தொட ரும் கார்ப்ஸ் (பட்டாலியன்) கமாண்டர் நிலை பேச்சுவார்த்தை மூலம் இது வரை இந்தியாவும் சீனாவும் கால் வான், பாங்காங், த்சோவின் வடக்கு மற்றும் தெற்கு கரைகள், கோக்ரா-ஹாட் ஆகிய பகுதிகளிலிருந்து படை கள் விலக்கிக் கொண்டன. இந்தியா-சீனா பிரச்சனைகள் குறித்து கடந்த மாதம், சீன வெளி யுறவு அமைச்சர் வாங் யீ, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஜோகன்னஸ்பர்க்கிலும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ஜகார்த்தாவிலும் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.