புதுதில்லி, மே 30- கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கான மூன் றாம் நபர் இன்சூரன்ஸ் பிரீமி யம் உயர்வு ஜூன் 1 முதல் அம லுக்கு வருகிறது. மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் பிரீமியமானது கடந்த 2019-20 நிதியாண்டில் உயர்த்தப்பட்டது. எனினும், கொரோனா தொற்றுப் பாதிப்பு காரணமாக அப்போதைக்கு இந்த உயர்வு நிறுத்தி வைக் கப்பட்டிருந்தது. இந்நிலை யில், 2022 ஜூன் 1 முதல் மூன் றாம் நபர் வாகனக் காப்பீட்ட உயர்வு அமலுக்கு வருவதாக ஒன்றிய போக்குவரத்து மற் றும் நெடுஞ்சாலைதுறை அமைச் சகம் அறிவித்துள்ளது. இதன்படி தனியார் கார் களுக்கு 1000 சிசி வரை, பிரீமி யம் ரூ. 2 ஆயிரத்து 94 ஆக உயர்கிறது. 1000 முதல் 1500 சிசி வரையிலான வாகனங்க ளுக்கு ரூ. 3 ஆயிரத்து 416 ஆகவும், 1550 சிசி திறனுக்கும் அதிகமான வாகனங்களுக்கு ரூ.7 ஆயிரத்து 897 ஆகவும் பிரீமியம் உயர்கிறது.
இதேபோல இரு சக்கர வாகனங்களுக்கான மூன் றாம் நபர் இன்சூரன்சிற் கான பிரீமியம் 75 சிசி-க்கு குறைவான வாகனங்க ளுக்கு ரூ.538 ஆகவும், 75 முதல் 150 சிசி திறனுடைய வாகனங்களுக்கு ரூ. 714 ஆக வும், 150 முதல் 300 சிசி வரை ரூ. ஆயிரத்து 366 ஆகவும் உயர்கிறது. 350 சிசிக்கு அதிகமான திறனுள்ள வாக னங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 804 பிரீமியமாக நிர்ணயிக் கப்பட்டு உள்ளது. சரக்கு வாகனங்களில் 12 டன்னுக்கு அதிகமாக 20 டன்னுக்குள் சுமை தூக்கும் வாகனங்களுக்கு பிரீமியம் ரூ.33 ஆயிரத்து 414-லிருந்து ரூ.35 ஆயிரத்து 313-ஆக வும், 40 டன்னுக்கு மேல் இழுக்கும் கனரக வாக னங்களுக்கான பிரீமியம் ரூ. 41 ஆயிரத்து 561-லிருந்து ரூ.44 ஆயிரத்து 242 ஆகவும் அதிகரிக்கிறது. பேட்டரி வாகனங்களுக் கான அடிப்படை காப்பீடு பிரீ மியமும் உயர்த்தப்பட்டுள் ளது. 30 கிலோவாட் வரை உள்ள வாகனங்களுக்கு பிரீ மியம் ரூ.ஆயிரத்து 780 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல 30 முதல் 65 கிலோ வாட் உள்ள கார்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 904 ஆகவும், புதிய கார்களுக்கு 65 கிலோ வாட்களுக்கு அதிகமான கார் களுக்கு ரூ.6 ஆயிரத்து 712 ஆகவும் உயர்ந்துள்ளது.