மும்பை மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்த லில் மகாயுதி கூட்டணி (பாஜக, சிவசேனா(ஷிண்டே), தேசிய வாத காங்கிரஸ் (அஜித்)) ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வர் பொறுப்பு, இலாகா ஒதுக்கீடு தொடர்பாக மகாயுதி கூட்டணிக்குள் பல்வேறு மோதல்கள் நிகழ்ந்தன. எனினும் மோடி அரசின் மிரட்டலால் மோதல்கள் முடிவுக்கு வந்தன. இந்நிலையில், அமைச்சர் பதவி ஒதுக்கீடு தொடர்பாக மகாயுதி கூட்ட ணிக்குள் அடுத்தகட்ட சலசலப்பு துவங்கி யுள்ளது. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மகாயுதி கூட்டணியில் அமைச்சர்களாக 39 பேர் பதவியேற்றனர். இதில் பாஜக வுக்கு 19 பேருக்கும், ஷிண்டே சிவ சேனாவுக்கு 11 பேருக்கும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு 9 பேருக்கும் அமைச்சர் பொறுப்பு ஒதுக் கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் அமைச்சர வையில் இடம் கிடைக்காத சிவசேனா (ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (அஜித்) எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அமைச் சர் பதவி கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த சிவசேனாவின் (ஷிண்டே) நரேந்திர போனேகர் கட்சியின் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சிவசேனா (ஷிண்டே) இரண் டாக உடையும் அல்லது அதிருப்தி எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரே தலை மையிலான சிவசேனாவிற்கு மாற உள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இதே போல தேசியவாத காங்கிரஸ் (அஜித்) கட்சிக்குள்ளேயும் அமைச்சர் பதவி தொடர்பாக மோதல் சம்பவங்கள் வெடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.