என்.வி.ரமணாவுக்கு மூத்த வழக்கறிஞர்கள் 76 பேர் கடிதம்
புதுதில்லி, டிச.27- உத்தரகண்ட் மாநிலம் ஹரித்து வாரில், பல்வேறு இந்துத்துவா அமைப்புக்கள் கூடி “தர்ம நாடாளு மன்றம்” (‘Dharma Sansad’) என்ற பெயரில், கடந்த டிசம்பர் 17 முதல் 19 வரை மூன்று நாட்களுக்கு மாநாடு நடத்தினர். ஹிந்து சாமியாரான யதி நர சிங்கானந்த் ஏற்பாடு செய்திருந்த தர்ம நாடாளுமன்றத்தில், ‘ஹிந்து ரக்ஷ சேனா’ அமைப்பைச் சேர்ந்த பிரபோதானந்த் கிரி, பாஜக தலை வர் அஸ்வினி உபாத்யாயா, பாஜக மகளிர் அணி தலைவி உதித்தா தியாகி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.
இவர்கள், “நாட்டில் இஸ்லாமி யர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை இப்படியே விட்டால், அடுத்த, 7-8 ஆண்டுகளில் சாலைகளில் நாம் பார்க்கக்கூடிய மனிதர்களெல்லாம் இஸ்லாமியரா கத்தான் இருப்பார்கள். எனவே, இந்தியாவை இந்து நாடாக மாற்று வதற்கும், இந்துக்களுக்கு மட்டு மான நாடாக உருவாக்குவதற்கும் போர் நடத்துவோம். தேவைப் பட்டால் கொலையும் செய்வோம். எதற்காகவும் அஞ்சக் கூடாது. மியான் மரில் (ரோஹிங்கியா முஸ்லிம் களுக்கு எதிராக) நடந்ததைப் போன்ற இன அழிப்பில் நாம் ஈடுபட வேண்டும். காவல்துறை, ராணுவம், அரசியல் பதவிகளில் உள்ள இந்துக் கள் தங்கள் கையில் ஆயுதங்களை எடுக்க வேண்டும். இன அழிப்பில் ஈடுபட வேண்டும். வெறும் 100 இந்துக் கள் சேர்ந்தால், 20 லட்சம் முஸ்லிம் களை கொன்று குவிக்கலாம்” என்று கலவர விதையை தூவினார்கள். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால், உத்தரகண்ட் பாஜக அரசானது, பெயரளவில் 2 பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தப்பவிடும் முயற்சியை செய்து வருகிறது.
இந்நிலையில், ஹரித்துவார் ஆன்மீக மாநாட்டில் இடம்பெற்ற இன அழிப்பு பேச்சுகளால் பல லட்சம் முஸ்லிம்களின் உயிருக்கு அச்சு றுத்தல் உருவாகி இருப்பதாகவும், இவ்விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து (Suo Moto) விசா ரிக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கு, நாட்டின் மூத்த வழக்கறிஞர்கள் 76 பேர் கூட் டாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: 2021 டிசம்பர் 17 மற்றும் 19 தேதி களுக்கு இடையே தில்லி (இந்து யுவ வாஹினி) மற்றும் ஹரித்வாரில் (யதி நரசிங்கானந்த்) ஏற்பாடு செய்யப் பட்ட இரண்டு தனித்தனி நிகழ்வு களில், முஸ்லிம்களை இனப்படு கொலை செய்வதற்கான வெளிப் படையான அழைப்புகள் அடங்கிய வெறுப்புப் பேச்சுக்கள் இடம்பெற் றுள்ளன என்பதை தலைமை நீதிபதி யின் கவனத்திற்குக் கொண்டு வரு கிறோம்.
இந்த நிகழ்வுகளில் 1. யதி நர சிங்கானந்த கிரி, 2. சாகர் சிந்து மகா ராஜ், 3. தரம்தாஸ் மகராஜ், 4. பிரேமா னந்த் மகாராஜ், 5. பூஜா ஷகுண் பாண்டே என்ற சாத்வி அன்னபூர்ணா, 6. சுவாமி ஆனந்த் ஸ்வரூப், 7. அஸ் வனி உபாத்யாய், 8. சுரேஷ் சாவான்கே, 9. சுவாமி பிரபோதா னந்த கிரி ஆகியோர் நிகழ்த்திய உரை கள் வெறும் வெறுப்புப் பேச்சுகள் அல்ல, மாறாக ஒரு முழு சமூகத்தை இனப்படுகொலை செய்வதற்கான வெளிப்படையான அழைப்பு. இவ் வாறான பேச்சுக்கள், நமது நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக் கும் பெரும் அச்சுறுத்தலை ஏற் படுத்துவது மட்டுமன்றி, மில்லியன் கணக்கான முஸ்லிம் குடிமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்ப தாகவும் உள்ளது. ஆயினும், இந்த வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக வெறுமென ஒருசிலர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்துள்ளனர். போதிய நட வடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட வில்லை. எனவே, மேற்கூறிய நிகழ்வு களின் தீவிரத்தன்மை மற்றும் உரை களின் தீவிரத்தன்மையைக் கருத் தில் கொண்டு, தாங்கள் தானாக (Suo Moto) முன்வந்து, இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் பிரிவுகள் 120பி, 121 ஏ, 124 ஏ, 153 ஏ, 153 பி, 295 ஏ மற்றும் 298 ஆகிய பிரிவு களின் கீழ் குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
இந்த உரைகள், கடந்த காலங்க ளிலும் நாம் கண்ட இதுபோன்ற வெறுப்பு உரைகளின் ஒரு பகுதி என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். இதுபோன்ற முந்தைய வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக இந்திய தண்ட னைச் சட்டத்தின் (IPC) 153, 153A, 153B, 295A 504, 506, 120B, 34 பிரிவு களின் கீழ் பயனுள்ள நடவடிக்கை கள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதைக் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தற்போது இதுபோன்ற மத வெறுப்பு வன்முறைப் பேச்சுக்கள் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்ட நிலையில், அவசர நீதித் தலையீடு தேவைப்படுகிறது. இது தொடர் பாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவின் கீழ் சில மனுக்கள் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்காக ஏற்கெனவே நிலுவையிலும் இருப் பதாகவும் எங்களுக்கு தெரிகிறது.
எனவே, நீதித்துறையின் சுதந்தி ரம் மற்றும் பன்முக கலாச்சார தேசத் தின் செயல்பாட்டிற்கு அடிப்படை யான அரசியலமைப்பு விழுமியங்க ளைப் பாதுகாக்க, நாட்டின் நீதித் துறையின் தலைவர் என்ற முறையில் உங்களின் உடனடி நடவடிக்கையை எதிர்பார்த்து இந்தக் கடிதத்தை நாங் கள் எழுதுகிறோம். இவ்வாறு வழக்கறிஞர்கள் தங் கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். பாட்னா உயர் நீதிமன்ற முன் னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ், மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, சல்மான் குர்ஷித், பிரசாந்த் பூஷன், ராஜு ராமச்சந்திரன், ஹூஜிபா அகமதி, சி.யு.சிங், மீனாட்சி அரோரா, விருந்தா குரோவர், ஹரின் ராவல், சித்தார்த் தவே, கபீர் தீட்சித், கிருத்திகா அகர்வால், பிரியங்கா சுக்லா, ஆதித்யா ஸ்ரீவஸ்தவா, விநா யக் பந்த், மணி குப்தா, அபிஷேக் என். திரிபாதி, நயன்தாரா ராய், ஜெயந்த் திரிபாதி உள்ளிட்டோர் இந்த கடி தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.