புதுதில்லி, மே 30 - கொரோனா தொற்று காரணமாக, பெற்றோர்கள் இருவரையோ அல்லது ஏற்கெனவே பெற்றோரில் ஒருவரை இழந்த நிலையில், மற்றொருவரையுமோ, சட்டரீதியான பாதுகாவலரையோ, தத்தெடுத்த பெற் றோர்களையோ அல்லது தத்தெடுத்த ஒற்றை பெற்றோரையோ- இழந்த குழந்தைகளுக்காக, “குழந்தை களுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம்” (PM Cares for Children), கடந்த 2021 மே 29 அன்று துவங்கப்பட்டது. இந்நிலையில், “குழந்தைகளுக் கான பி.எம். கேர்ஸ்” மூலம், குழந்தை களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் மாதம் ரூ. 4 ஆயிரம் உத வித்தொகை, ஆயுஷ்மான் பாரத்-பிர தான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜ னாவின் கீழ் குழந்தைகளுக்கு பாஸ்புக் மற்றும் சுகாதார அட்டை வழங் கும் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று வழங்கினார்.
கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதாந்திர உதவித்தொகையாக ரூ.4000 அரசால் வழங்கப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கு 23 வய தாகும் போது, பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து மொத்தமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 18 ஆண்டுகளுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு கிடைக்கும். காப்பீட்டு பிரீமியத்தை பிஎம் கேர்ஸ் செலுத்திவிடும். பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அரு கில் உள்ள ஒன்றிய அரசின் பள்ளி அல்லது தனியார் பள்ளியில் சேர்க்கப் படுவார்கள். சைனிக் பள்ளி மற்றும் நவோதயா வித்யாலயா போன்ற ஒன்றிய அரசின் எந்தவொரு போர்டிங் பள்ளியிலும் 11 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் சேர்க்கப்படு வார்கள். குழந்தை தனது பாதுகாவ லருடன் அல்லது வேறு யாரேனும் குடும்ப உறுப்பினருடன் வசித்து வந்தால், அவர் அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயா அல்லது தனி யார் பள்ளியிலும் சேர்க்கை பெறுவார். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், குழந் தைகளின் கட்டணம் பிஎம் கேர்ஸ் நிதி யில் இருந்து வழங்கப்படும் மற்றும் அவரது பள்ளிச் சீருடை, புத்தகங் கள் மற்றும் நகல்களுக்கான செலவு களும் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.