புதுதில்லி, பிப்.14- இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை (Life Insurance Corporation Of India - LIC) தனியார் முதலாளி களுக்கு சூறையாடும் திட்டத்தில் மோடி அரசு முக்கியக் கட்டத்திற்கு வந்துள்ளது. எல்ஐசி நிறுவனத்தில் அரசுக்கு இருக்கும் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு பல பத்தாண்டு களாகவே ஒன்றிய ஆட்சியாளர்கள் முயற்சி மேற்கொண்டு வந்தனர். எனி னும், இடதுசாரிக் கட்சிகள், எல்ஐசி ஊழி யர் தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பால் அந்த முயற்சி கைகூட வில்லை. ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பின், தனியார்மய முயற்சியை மீண்டும் வேகமாக கையில் எடுத் துள்ளது.
கடந்த 2021 பிப்ரவரி 1 அன்று ஒன்றிய அரசின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்ஐசி நிறுவனத்தில் அர சாங்கத்திற்கு உள்ள 100 சதவிகித பங்கு களில் ஒரு பகுதி, ஆரம்பப் பொதுச் சலுகை (Initial Public Offering - IPO) மூலம் தனியாருக்கு விற்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில், 51 சதவிகித பங்குகள், கட்டாயமாக ஒன்றிய அரசு வசமே இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது, மோடி அரசுக்கு சிக்கலைக் கொடுத்தது. இதையடுத்து, எல்ஐசி-யில் ஒன்றிய அரசுக்கு இருக்கும் 100 சதவிகித பங்கு களையும் தனியாருக்கு விற்பதற்கு ஏற்ப, 2021 ஆகஸ்டு 2 அன்று நாடாளு மன்றத்தில் பொதுக் காப்பீட்டு சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றியது.
இதன்மூலம் எல்ஐசி யை சூறையாடுவதற்கு இருந்த தடை களை உடைத்தது. 2021 டிசம்பருக்குள் எல்ஐசி பங்கு கள் விற்பனைக்கு வந்துவிடும் என்று முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத் துறை (Department of Investment and Public Asset Management -DIPAM) செயலாளர் துகின் காந்த பாண்டே அறிவித்தார். எனினும் பங்குகளை மதிப்பிடுவது தொடர்பான பணிகளால் ஐபிஓ வெளி யீடு தள்ளிப்போனது. கடைசியாக, 2022 மார்ச் 31-க்குள் எல்ஐசி பங்குகள் விற்பனைக்கான அறிவிப்பு இருக்கும் என்று துகின் காந்த பாண்டே உறு திப்படுத்தினார். அதன்படியே, கடந்த சில நாட்க ளுக்கு முன்பு, எல்ஐசி பொதுப் பங்குகள் வெளியீட்டிற்கு, ‘ஐஆர்டிஏஐ’ எனப்படும் ‘இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமும்’ (Insurance Regulatory and Development Authority of India) அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து, ‘‘எல்ஐசி-யில் ஒன்றிய அரசுக்குள்ள பங்கில் 5 சதவிகிதமான- 31.63 கோடி பங்குகளை பொதுப் பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்வதற்கான வரைவு அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பங்கு சந்தை முறையீட்டு வாரியத்திடம் (SEBI) ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது’’ என்று என்று முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை செயலர் துஹின் காந்த பாண்டே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த வரைவு அறிக்கையின்படி, எல்ஐசி-யின் உட்பொதிக்கப்பட்ட மதிப்பு (Embedded Value) ரூ. 5 லட்சத்து 39 ஆயிரத்து 686 கோடி என்று மதிப்பிட்டுள்ள ஒன்றிய அரசு, இந்த உட்பொதிக்கப்பட்ட மதிப்பைக் காட்டிலும் 2 முதல் 4 மடங்கு வரை பங்குகளை வர்த்தகம் செய்யலாம் என்ற அடிப்ப டையில், எல்ஐசியின் சந்தை மூல தனத்தை ரூ. 10.8 லட்சம் கோடி முதல் ரூ.21.6 லட்சம் கோடி வரை நிர்ணயித்து, அதில் 4.99 சதவிகித பங்குகள் விற் பனை செய்யப்பட உள்ளதாக கூறப் பட்டுள்ளது. தற்போது எல்ஐசியின் 632 கோடியே 49 லட்சத்து 97 ஆயிரத்து 701 பங்கு கள் (100 சதவிகிதம்) ஒன்றிய அரசு வசம் உள்ள நிலையில், இதில், 4.99 சத விகிதத்தை, அதாவது, 31 கோடியே 62 லட்சத்து 49 ஆயிரத்து 885 பங்குகள் தனியாருக்கு விற்கப்பட உள்ளன. இந்த பங்குகளில் 50 சதவிகிதம் நிறு வன முதலீட்டாளர்களுக்கும், 35 சத விகிதம் சில்லரை முதலீட்டாளர்களுக் கும் 10 சதவிகிதம் எல்ஐசி பாலிசி தாரர்களுக்கும் ஒதுக்கப்பட உள்ளது. பாலிசிதாரர்கள் வாங்கும் பங்குகளுக்கு, அதன் விலையில் 5 சதவிகிதம் தள்ளு படி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டு உள்ளது.
தலா 10 ரூபாய் முக மதிப்புக் கொண்ட இந்த 31 கோடி பங்குகளை விற்பதன் மூலம் ரூ. 62 ஆயிரம் கோடி முதல் 65 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டலாம் என்று ஒன்றிய அரசு கணக்கு போட்டுள்ளது. இதில் கிடைக்கும், ஒரு பைசா கூட எல்ஐசி நிறுவனத்திற்கு கிடைக்காது. அனைத்தும் மோடி அரசின் கஜானா விற்கே செல்லும் என்பது இங்கு குறிப்பி டத்தக்கது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டுக் கான திருத்தப்பட்ட பங்கு விலக்கல் இலக்கான (divestment target 2021-22) 78 ஆயிரம் கோடியை முழுமையாக எட்ட முடியும் என்று மோடி அரசு கருதுகிறது. நடப்பு நிதியாண்டில் ஏற்கெனவே 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான நிதியை பங்கு விலக்கல் மூலம் மோடி அரசு திரட்டி விட்டது. இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காப்பீட்டு பிரிமியம் வர்த்தகத்தில் 64.1 சதவிகி தத்தையும், புதிய காப்பீட்டு பிரீமியம் வர்த்தகத்தில் 66.2 சதவிகிதத்தையும், தனிநபர் காப்பீடுகளில் 74.6 சதவிகி தத்தையும், குழு காப்பீட்டில் 81.1 சத விகித்தையும் சந்தையில் கொண்டி ருக்கும் மாபெரும் ஆலமரமாகும். செப்டம்பர் 30, 2021 நிலவரப்படி ரூ. 39 லட்சத்து 6 ஆயிரம்கோடி மதிப்பி லான நிர்வகிக்கப்பட்ட சொத்துகளுடன் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து நிர்வாகத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது, இந்தியாவில் உள்ள 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கீழ் இருக்கும் சொத்துகளைக் காட்டி லும் 3.3 மடங்கு (330 சதவிகிதம்) அதிக மான சொத்துக்களை எல்ஐசி கொண்டி ருக்கிறது. இதைத்தான் முதலாளி களுக்கு சூறையாட மோடி அரசு தற்போது தீவிரமாகி இருக்கிறது.