states

img

சிபிஐயிலும் 1300 காலிப் பணியிடங்கள்!

புதுதில்லி, ஜன.4- ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஒன்றிய பாஜக அரசு, அதற்கு மாறாக நாட்டில் அறிவிக்கப்படாத வேலைநிய மனத் தடையை அமல்படுத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொட ர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.  ரயில்வே, பல்கலைக்கழ கங்கள், கல்லூரிகள், வங்கிகள், ஆயுதப் படைகள் உள்ளிட்ட அர சுத்துறைகளில் பல லட்சம் காலிப் பணியிடங்களை மோடி அரசு நிரப்பாமல் வைத்துள்ளது என்று அவர்கள் கூறி வருகின்றனர். இந்தப் பின்னணியில்தான்,

சிபிஐ எனப்படும் நாட்டின் மிக முக்கி யமான மத்திய புலனாய்வுக் கழ கத்திலும், மோடி அரசு 1300 காலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத் திருப்பது தெரியவந்துள்ளது. 2020ஆம் ஆண்டு மார்ச் 31 அன்றைய நிலவரப்படி, சிபிஐ-யில் பணியாற்ற வேண்டிய மொத்த ஊழியர்களின் எண் ணிக்கை 7 ஆயிரத்து 272 ஆகும். ஆனால், தற்போதைய நிலவரப் படி, சிபிஐயில் 5 ஆயிரத்து 899 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்த கணக்கின்படி, சிபிஐ அதிகாரிகள் முதல் உண வக ஊழியர் வரையிலான 1,374 பணியிடங்கள் மத்தியப் புல னாய்வுக் கழகத்தில் காலியாக விடப்பட்டுள்ளன.  குறிப்பாக, மத்திய புல னாய்வுக் கழகத்தில், அனுமதிக்கப் பட்டிருக்கும் 5 ஆயிரம் செயல் அதி காரிகள் பணியிடங்களில் 829 பதவியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது 4,171 செயல் அதிகாரிகளே பணியாற்றி வரு கின்றனர்.

தொழில்நுட்ப அதி காரிகள் மட்டத்திலும், அனு மதிக்கப்பட்ட 162 அதிகாரிகளுக்கு பதிலாக 66 பேர் மட்டுமே பணி யாற்றி வருகிறார்கள். 96 காலிப் பணியிடங்கள் உள்ளன.  சிபிஐ வசம் சுமார் 1,256க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பதிவு செய்யப்பட்ட 64 வழக்குகள் நிலுவையில் உள் ளன. இவை தவிர, ஒவ்வொரு நாளும் சிபிஐ வசம் செல்லும் வழக்குகளின் எண்ணிக்கை அதி கரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், போதிய அதிகாரிகள் இல்லாததால், விசாரணை தேக்க மடைவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.