புதுதில்லி, ஏப்.13- மதச்சார்பற்ற மாற்றுக்கான விவாதம் நடைபெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வை தோற்கடிப்பதே நோக்கம். மாநிலங்களில் அரசியல் சூழல் வேறு என்றும், மாநில நிலவரங்களுக்கு ஏற்ப கூட்டணி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார். து.ராஜா மற்றும் நிதிஷ்குமாருடனான சந்திப்புக்குப் பிறகு யெச்சூரி செய்தியாளர் களிடம் பேசுகையில், மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்க்க பாஜக அரசிடம் எந்த திட்டமும் இல்லை. வாழ்வின் சிரமங்களி லிருந்து கவனத்தைத் திசை திருப்பவும், பிரி வினையைப் பயன்படுத்திக் கொள்ளவும் பாஜக முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார்.