ஜேடிஎஸ் கட்சி கடந்த மாதம் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சியின் மாநிலத்தலைவர் இப் ராஹிமை நீக்கிய தேவகவுடா, புதிய தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித் தார். ஜேடிஎஸ் பாஜக கூட்டணியில் இணைந்தது, அக்கட்சி கேர ளத்தில் இடது ஜனநாயக முன்ன ணியுடன் இணைந்து செயல்படு வதில் சிக்கலை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், கேரளாவில் இடதுசாரிகள் (எல்டிஎப்) உடனான கூட்டணி தொடரும் என்று மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் கர்நாடக தலைவர் குமார சாமி அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், “மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கேரள பிரிவு, இடது ஜனநாயக முன்னணியுடன் தொடரும். அங்குள்ள எங்கள் கட்சி எல்டிஎப் கூட்டணியில் இருந்தவாறே தங்கள் பணிகளை மேற்கொள்வார் கள். கர்நாடகா விவகாரம் தனி. இங்கே மதச்சார் பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும். இதைத் தான் எங்கள் தலைவர் தேவகவுடா கூறியுள்ளார்” என கூறி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.