18ஆவது பொதுத் தேர்தல் - மோடி வெல்லற்கரியவர் என்ற பிம்பம் சுக்குநூறானது. 18ஆவது பொதுத் தேர்தலில் மோடி தலைமை யிலான பாஜக அரசு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பெரும்பான்மையையும் இழந்து விட்டது. மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தனது கூட்டணி கட்சிகளை சார்ந்து இருக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. உயர்நோக்கம் தேவை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை யைப் பெறுவேன் என தம்பட்டம் அடித்தார் மோடி. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்கள் வரை வெல்லும் என்று கூறி, தன்னை கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றும் கதை கூறினார்! முடிசூட்டுக்குப் பதி லாக, அவருக்கு தலையில் ஒரு குட்டு தான் கிடைத்தது. இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவதற்குப் பதிலாக, பாஜக வென்ற இடங்கள் 303இல் இருந்து 240 ஆகக் குறைந்தது. கூட்டணிக் கட்சிகளை நம்பி இருக்கும் நிலை. மறு புறம், பல சவால்கள் இருந்தபோதிலும் எதிர்கட்சி களின் “இந்தியா” கூட்டணி குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகச் செயல்பட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பின்னடைவுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. பாசிச எதேச்சதிகாரத் தாக்குதல்கள் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருவதை யும், பகுத்தறிவை அழிக்கும் பாசிச செயல்முறை கள் தடையின்றி நடந்து வருவதையும் பார்த்த இந்தியாவின் அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற மக்களும் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர் என்பது உண்மைதான். அந்தச் சூழ்நிலையில் ‘ஐக்கிய மக்கள் முன்னணியின்’ தேவை வெளிப்படையானது மற்றும் மிக முக்கியமானது; ஆனால் அந்த முன்னணி பிற்போக்கு போக்குகளின் சித்தாந்த மேலாதிக்கத்திற்கும் அதிகாரத்தில் உள்ள அவர்களின் ஆதரவாளர்களுக்கும் சவால் விடும் வகையிலும் சுயநலமின்றி மக்கள் நலனுக்காக பாடும் ஓர் உயர்ந்த நோக்கமுள்ள தாகவும் இருக்க வேண்டும்.
ஆளும் வர்க்கத்தின் விசுவாச ஊழியர்
இந்திய ஆளும் வர்க்கம் இன்னும் தனது விசுவாசமான ஊழியராக பிரதமராக மோடியை தொடர வைப்பதில் வெற்றி பெற்றுள்ளது, ஏனெனில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விட்டு அவர்களுடைய ஆக்கிரமிப்பை தங்கு தடை இன்றி தொடர வேண்டும். அந்த அளவிற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனத்தின் கட்டுப்பாடற்ற சுரண்டலுக்கு ஏற்ற இடமாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. மறுபுறம், நவதாராளமயக் கொள்கை கள் இந்தியா கூட்டணியின் இதர அங்கத்தினர் களுக்கு விருப்பமானது தான். எனவே, இடது சாரிக் கட்சிகளைத் தவிர, இந்தியா கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து அத்தகைய கொள்கை பற்றியோ, வெளிப்படையான கொள்கை நிர்ணயம் குறித்தோ எந்த ஒரு மாயையையும் நாம் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கவோ அல்லது வளர்த்துக் கொள்ளவோ கூடாது.
கவலைக்குரிய விஷயம்
இத்தேர்தலில் மிகவும் கவலையான விஷயம் என்னவென்றால், இடதுசாரிகளால் அதிக அளவில் முன்னேற முடியவில்லை. நவ தாராளவாத நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோகும் அனைத்து அரசியல் சக்திகளும் நாடாளு மன்றத்தில் கண்ணியமான முறையில் இடம்பிடித்துள்ளனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு கருத்தியல் ரீதியாக சவால்விடும் நாட்டின் ஒரே அரசியல் சக்தியான இடதுசாரிகள், தேர்தல் ரீதியாக மிகவும் பலவீனமாகிவிட்டனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலக முதலாளித்துவம் நீண்ட காலமாக ஓர் ஆழமான அமைப்பு ரீதியான நெருக்கடி யில் உள்ளது. மேலும் அது ஏற்கனவே ஒரு முட்டுச்சந்தில் நிற்பதால், அதன் மிகவும் உறுதியான நவ-தாராளவாத திட்டங்களால் அதைக் காப்பாற்ற முடியவில்லை, இதுவும் அனைத்து முதலாளித்துவ ஆதரவாளர்களாலும் நன்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. அவர்கள் தீவிர வலதுசாரி சூழ்ச்சிகளில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ளனர். முதலாளித்துவ நெருக்கடி மென் மேலும் ஆழமாகும் என்பதே வரலாறு. எனவே, அனைத்து வகையான சுரண்டல் மற்றும் அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடி மனிதனை விடுவித்து தொழிலாளி வர்க்கம் மேலும் முன்னேற பெரும் வாய்ப்பு உள்ளது. சமூக மாற்றத்திற்கான நமது வரலாற்றுப் பணியை மேற்கொள்வோம்; தொழிலாளி வர்க்கம் தன் சொந்த வலிமையை மேலும் அதிகரித்து கொண்டால் மட்டுமே இடதுசாரி அரசியல் தீர்மானிக்கக்கூடிய சக்தியாய் மாறும். அத்தகைய ஒரு புதிய உயர்ந்த நிலையை எட்டக்கூடிய உண்மையான ‘மக்கள் ஐக்கிய முன்னணியை’ கட்டமைக்க வேண்டும்.
நன்றி : ‘தி ஒர்க்கிங் கிளாஸ்’ தலையங்கம்
தமிழில்: கடலூர் சுகுமாரன்