பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது ஹஸ்தியோ ஆரண்ய காடுகள். இது சத்தீஸ்கரின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக ஹஸ்தியோ ஆரண்ய வனப்பகுதியை பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் அதானிக்கு தாரை வார்த்துள்ளது சத்தீஸ்கர் பாஜக அரசு. அதானிக்காக காடுகளை அழிக்கும் வேலை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதனை கண்டித்து ஹஸ்தியோ வனப்பகுதியில் உள்ள கிராம பழங்குடியின மக்கள் கடந்த 6 நாட்களுக்கு மேலாக சத்தீஸ்கர் மாநில பாஜக அரசுக்கும், அதானிக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.