states

img

அனைத்துச் சாதியினர் அர்ச்சகராவதற்கான அரசாணைக்குத் தடை விதிக்க முடியாது!

உச்சநீதிமன்றம்  தீர்ப்பு

புதுதில்லி, நவ. 8 - அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அர சின் சட்டத்திற்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  இந்த விவகாரத்தில், உயர்  நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்று வதற்கும் மறுத்துவிட்ட நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தையே முறையிடுமாறும், அதுவரை அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள (ஆகம கோவில்களில் புதிய நியமனங்கள் கூடாது என்ற) நிலையே தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். முறையாக பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினருமே அர்ச்சகர் ஆகலாம் என்று அறிவித்து அதனை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரு கிறது. ஆனால், ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர் நியமனம் நடை பெறுவதாக, அகில இந்திய ஆதி  சைவ சிவாச்சாரியார்கள் சேவா  சங்கம் என்ற பெயரில் பாலாஜி  என்பவரும், இன்னும் சில அமைப்புக் களும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில் களில், ஆகம விதிகளுக்குப் புறம்பாக புதிய நியமனங்களையோ அல்லது இடமாறுதல் உத்தரவுகளையோ பிறப்பிக்கக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

உரிய பயிற்சி பெற்றவர்களே  அர்ச்சகர்களாக நியமனம்

இந்நிலையில், இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதன் அடிப்படையில் அர்ச்சகர்களை நியமிக்கிறீர்கள்? அவர்களுக்கான தகுதி என்ன? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, “பயிற்சி பெற்றுள்ள அர்ச்சகர்கள் ஆகம விதிகளை படித்தவர்கள்தான் நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும், அர்ச்ச கர்களாக நியமனம் செய்ய அரசு சார் ்பில் கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படு கிறது” என்று தமிழ்நாடு அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது. மேலும், “அரசு வெளியிட்ட அர சாணை அர்ச்சகர் பயிற்சிக்கானதே தவிர, அர்ச்சகர் நியமனத்துக்கானது அல்ல எனவும், ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும்” எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கோரிக்கை விடுத்தார். அர்ச்சகர் நியமனம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்து க்கு மாற்றவும் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு “ஆகம கோயில்களில் அர்ச்சகர் நியமனங்களை மேற் கொள்ளாமல் தற்போதுள்ள நிலையே தொடர ஏற்கெனவே உத்தர விட்டுள்ளோமே..” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், “தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும்” என்ற முந்தைய செப்டம்பர் 25 அன்றைய உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று கூறி விட்டனர். மேலும், அர்ச்சகர் நியமனங்கள் தொடர்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெறும் விசார ணைக்கு தடை விதிக்கவும், தமிழ கத்தில் ஆகம கோவில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்கவும் மறுத்து விட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த விவகாரம் என்பதால் இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கட்டும் என உத்தரவிட்டனர்.

பிரதமர் கூறினார் என்றால் பிரதமரிடமே செல்லுங்கள்!

அப்போது, தமிழ்நாட்டில் கோயில்களை மாநில அரசு கைப்பற்றி  வைத்திருப்பதாக பிரதமரே கூறி யுள்ளார் என சேவா சங்க வழக்கறி ஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் கோயில்களை அரசு கைப்பற்றி வருவதாக பிரதமர் கூறினால் அவரிடமே செல்லுங்கள் என காட்டமாக குறிப்பிட்டதோடு, அனைத்து சாதியினரையும் அர்ச்சக ராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்கு தடை விதிக்கமறுத்தனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 2024 ஜனவரி 25-ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தனர்.