முஸ்லிம் மக்களை அடையாளம் காண வும், அவர்கள் விற்கும் உணவுப் பொருட்களை வாங்க விடாமல் தடை செய்து மதக் கலவரத்தை தூண்டும் நோக்கத் தில் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் வைக்கப்படும் உணவுக் கடைகளின் உரிமை யாளர் பெயர் மற்றும் ஊழியர்களின் பெயர் களை அடையாள அட்டையாக வைக்க வேண்டும் என உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய 3 மாநில பாஜக அரசுகள் உத்தரவிட்டன. பாஜக அரசுகளின் இந்த கீழ்த்தரமான உத்தரவு மத மோதலுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், எதிர்பார்த்தது போலவே உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரையில் நேரடியாக மற்றும் மறைமுகமாக களமிறங்கியுள்ள இந்துத்துவா குண்டர்கள் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
சஹாரன்பூர்
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் அமன் என்ற இஸ்லாமியர் உணவுக் கடை வைத்து இருந்தார். செவ்வாயன்று நள்ளி ரவு கன்வார் பக்தர்கள் என்று கூறி கடைக்குள் நுழைந்த இந்துத்துவ குண்டர்கள்,”யாத்திரை மேற்கொள்ளும் பகுதியில் முஸ்லிம்கள் கடை வைக்கக்கூடாது என்று கூறியுள்ளோம். எதற்கு கடை வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பி அமன், அவரது மைத்துனர் மோனு ஆகியோர் மீது தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து போலீசார் முன்னிலையிலேயே அம னின் இருசக்கர வாகனத்தை இந்துத்துவா குண்டர்கள் அடித்து நொறுக்கினர். தாக்கு தல் நடத்தியவர்கள் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும், அவர்கள் ஹரியானா மாநிலத்தி லிருந்து சஹாரன்பூர் வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகி யுள்ளது. இந்நிலையில், அமன் அளித்த புகாரின் அடிப்படையில் 7 பேர் மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்குப்பதிவு மட்டுமே பதிவு செய்துள்ளனர். அடையாளம் கண்ட பின்பும் இன்னும் அவர்களை கைது செய்யவில்லை.
ஹரித்வார்
பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் புதனன்று கன்வார் யாத்திரையை இழிவுப்படுத்தியதாக கூறி இ-ரிக்ஷா ஓட்டுநர் சஞ்சய் குமார் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. தடிமனான மரக் கட்டைகளால் தாக்குதலுக்கு உள்ளான சஞ்சய் குமார் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எல்லாம் பொய் ; போட்டுடைத்த எஸ்பி
கன்வார் யாத்திரையை இழிவுபடுத்தியதன் காரணமாகவே சஞ்சய் குமார் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியது. ஆனால் ஹரித்வார் மாவட்ட எஸ்.பி. பர்மேந்திர தோபால், “கன்வார் யாத்திரை செய்தவர்களை சஞ்சய் குமார் இழிவுபடுத்தவில்லை. ஆனால் சஞ்சய் குமாரை பொய் குற்றச்சாட்டின் பேரில் தாக்குதல் நடத்தி இ-ரிக்ஷாவை சேதப்படுத்தி யுள்ளனர்” என அவர் கூறியுள்ளார். மேலும், “இந்த விவகாரம் தொடர்பாக மங்களூர் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் அடையாளம் காண முயற்சித்து வருகிறோம். அவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும்” என ஹரித்வார் மாவட்ட எஸ்.பி. பர்மேந்திர தோபால் கூறினார். இதன் மூலம் பொய்க் குற்றச்சாட்டின் பேரில் வன் முறையை தூண்டும் இந்துத்துவா குண்டர் களின் சதிச்செயல் அம்பலமாகியுள்ளது.
முசாபர்நகர்
உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரின் மன்சூர்பூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள், தாங்கள் சாப்பிட்ட மாம்பழக் கொட்டைகளை சாலை யில் கொட்டி வைத்ததற்காக இந்துத்துவா கும்பல் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் பெட்ரோல் பங்க் அறையின் ஒரு பகுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். இதே போல முசாபர்நகரின் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்குட்பட்ட மீனாட்சி சவுக் பகுதிக்கு அருகே மனநலம் குன்றிய ஒருவரை யும் இந்துத்துவா கும்பல் கொடூரமாகத் தாக்கியது. இதுபோன்று மேலும் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகவும், முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மறைக்கப் பட்டுள்ளதாக சமூகவலை தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
கன்வார் யாத்திரை உத்தரவுக்கு விதித்த தடை தொடரும் உச்சநீதிமன்றம் உத்தரவு
3 மாநில பாஜக அரசுகளின் கன்வார் அறிவிப்புக்கு தடை விதித்து கடந்த ஜூலை 22 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கு வெள்ளியன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு,“நாங்கள் எங்களின் ஜூலை 22 அன்று வழங்கிய உத்தரவுக்கு விளக்கம் அளிக்கப் போவதில்லை. எங்களின் அன்றைய உத்தரவில் சொல்ல வேண்டியவைகளை நாங்கள் தெரிவித்துவிட்டோம். ஒருவரின் பெயரினை தெரிவிக்கும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது” என்று தெரிவித்தனர்.
மக்கள் தான் தடை விதிக்கச் சொன்னார்களாம்!
கன்வார் யாத்திரை உணவகம் தொடர்பான சர்ச்சைக்குரிய உத்தரவை அமல்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டதாக உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது பாஜக ஆளும் உத்தரப்பிரதேச அரசு. அந்த மனுவில்,”அமைதியான மற்றும் ஒழுங்கான யாத்திரையை மேற்கொள்ளவே உணவகம் தொடர்பான பெயர்ப் பலகை வைக்க உத்தரவிடப்பட்டது. குறிப்பாக உணவகங்களின் பெயர் தொடர்பாக பல்வேறு குழப்பம் கிளம்புவதாக பக்தர்கள், பொதுமக்கள் கூறினர். இதன்காரணமாகவே கன்வார் யாத்திரை உணவக கட்டுப்பாடு விதிக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.