மன்னிப்பு கேட்க உத்தரவு
கர்னல் சோபியா குரேஷியை பாகிஸ்தான் சகோ தரி என தங்களது மதவெறி அஜண்டாவை வைத்து பேசிய மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா தொடர் விமர்சனங்களையும் கண்டனங்களையும் எதிர்கொண்டு வருகிறார். அவரது கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் அரசி யலமைப்பின் மீது உறுதி எடுத்து பதவிகளை வகிக்கும் நபர்கள் பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப் பிடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கண்டித்துள்ளார். விஜய் ஷாவின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அவ்வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. மேலும் அவர் மீது குற்ற வியல் நடவடிக்கைகளைத் தொடங்க உத்தரவிட்டது. இந்நிலையில் கைது செய்யப் படுவதிலிருந்து இடைக்கால பாது காப்பு கோரிய விஜய் ஷா உச்சநீதி மன்றத்தில் மனு செய்திருந்தார். மனு மீதான விசாரணையில் கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், “நீங்கள் என்ன வகையான கருத்துக்களைச் சொல்கிறீர்கள்? நீங்கள் கொஞ்சம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேளுங்கள் என்று அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் ஒரு நாளில் உங்க ளுக்கு எதுவும் நடக்காது. நீங்கள் யார் என்பது உங்களுக்குத் தெரி யும்” என்று தெரிவித்ததுடன் கைது செய்யப்படுவதிலிருந்து இடைக் கால பாதுகாப்பு கோரிய விஜய் ஷாவின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அதேபோல விஜய் ஷாவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், அமைச்ச ரின் கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடி யாதவை மற்றும் பொறுப்பற்றவை என்றும் தெரிவித்தார். அரசிய லமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள் பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.