ஒரே ஆண்டில் 171 என்கவுண்டர்கள் என்பது கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல
புதுதில்லி பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போலீஸ் என்கவுண்டர் கொலை சம்பவங் கள் மிக மோசமான அளவில் அதி கரித்து வருகின்றன. குறிப்பாக 2021-2022 ஒரே ஆண்டில் 171 என்கவுண்டர் கள் அசாம் போலீசாரால் மேற்கொள் ளப்பட்டன. இந்த என்கவுண்டர் கொ லைகளில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் உயிரிழந் துள்ளார்கள். இதனால் அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முஸ்லிம் மக்களை மட்டுமே குறி வைத்து என்கவுண்டர்கள் நிகழ்த்தி வருகிறார் என பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்து வருகின்றன. அசாம் பாஜக அரசு மேற்கொண்ட என் கவுண்டர்கள் 60% போலியானவை என செய்திகளும் சமீபத்தில் வெளி யாகின. என்கவுண்டர்கள் விஷயத்தில் மாநில அரசு ஒருமுறை கூட விசார ணைக்கு உத்தரவிடவில்லை. அசா மில் நடந்த போலீஸ் என்கவுண்டர் கொலைகள் குறித்து சுதந்திர மான விசாரணைக்கு உத்தரவிட கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆரிப் யெசின் ஜ்வாடர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் கவு காத்தி உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்க மறுத்தது. இதனால் வழக்கறிஞர் ஆரிப் யெசின் ஜ்வாடர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அசாம் அரசு மழுப்பல் அசாம் என்கவுண்டர் தொடர் பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி,”அசாம் மாநிலத் தில் 2021-2022இல் 171 போலீஸ் என்கவுண்டர்கள் நடந்துள்ளன. என்கவுண்டர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை (முஸ்லிம்) குறிவைத்து நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு சாதாரண விசாரணை கூட நடத்தவில்லை” என வாதிட் டார். அசாம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,”கடந்த 10 ஆண்டுக ளில் தப்பியோடிய குற்றவாளிக ளில் 10% பேர் மட்டுமே போலீஸ் என் கவுண்டர் நடவடிக்கையில் காயம டைந்துள்ளனர். மாநிலத்தில் நிக ழும் என்கவுண்டர்கள் தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப் பட்டது” என மழுப்பலாக பதில் அளித்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி அசாம் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் மழுப்பலான பதி லால் அதிருப்தி அடைந்த உச்சநீதி மன்ற நீதிபதிகள்,”ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து மாநில காவல்துறை என்கவுண்டர் கொ லைகளை நடத்துவது ஏன்? அசாம் காவல்துறையினர் ஒரு சமூகத்தை ஏன் குறிவைக்கிறார்கள்? தங்கள் கடமைகளை மீறி அவர்கள் செயல் பட சுதந்திரம் அளித்தது யார்? 171 என்கவுண்டர்கள் நிகழ்ந்துள்ள சூழலில், இதுவரை மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தாதது ஏன்? மாஜி ஸ்திரேட் விசாரணை நடத்த 10 அல்லது 15 நாட்கள் கூட ஆகாது. எதுவாக இருந்தாலும் என்கவுண் டர் நடக்கவில்லை என்று கூற முடி யாது. அசாம் மாநிலம் மிகவும் சிக் கலான கடந்த காலத்தைக் கொண் டுள்ளது. அசாம் மாநிலத்தில் அடிக் கடி போலி என்கவுண்டர் வழக்கு கள் வருகின்றன. 171 என்கவுண்டர் தொடர்பாக விரிவான விபரங்களை அசாம் அரசு அளிக்க வேண்டும்” எனக் கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி கள் வழக்கின் அடுத்தகட்ட விசார ணையை நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.