states

பிவானியில் திடீர் நிலச்சரிவு: இருவர் பலி

பிவானி, ஜன.1-  ஹரியானா மாநிலம் பிவானியில் உள்ள தாதம் பகுதியில் உள்ள சுரங்கத்தில் சனிக்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், இரண்டு பேர் உயிரிழந்தனர். சுரங்கத்தில் எத்தனை தொழிலாளர்கள் பணி யாற்றினர் எனத் தெரியவில்லை. குறைந்தது 15 முதல் 20 பேர் இருக்கலாம் என அஞ்சப்படு கிறது. இருவர் பலியானதை மட்டும் தோஷம் காவல்நிலைய ஆய்வாளர் சுக்பீர் உறுதிப் படுத்தினார். தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடு பட்டனர். அந்த சுரங்கம் அமைந்துள்ள மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள், இயந்திரங்கள் மண்ணில் புதைந்துள்ளது. மாநில விவசாயத்துறை அமைச்சர் ஜேபி தலால் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், நிலச்சரிவில் சிலர் உயி ரிழந்துள்ளனர். எத்தனை பேர் உயிரிழந்துள்ள னர் என்ற உறுதியான தகவலை தற்போது கூற முடியாது. சம்பவ இடத்திற்கு மருத்து வர்கள் விரைந்துள்ளனர். உயிருடன் உள்ள வர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கை களை தீவிரப்படுத்தி உள்ளோம் எனக்கூறினார்.