பழங்குடி இளைஞரைத் தாக்கியோர் மீது கடும் நடவடிக்கை தேவை கே.ராதாகிருஷ்ணன் எம்.பி., வலியுறுத்தல் வயநாடு பழங்குடியின இளைஞர் மீது தாக்குதல் நடத்தியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்ப வங்கள் இனி நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர் கே.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி யுள்ளார். இந்த தாக்குதலுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுப் பார்கள். சுற்றுலா பயணிகள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதி கரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். ஒருவர் தங்களை விட வலு குறைந்தவர்களுக்கு தீங்கு செய்ய முயற்சிக்க கூடாது, மாறாக அவர்களுக்கு உதவ வேண்டும். சமுதா யத்திற்கு சரியான விழிப்புணர்வு தேவை என்றும் ராதாகிருஷ்ணன் மேலும் கூறினார். ஞாயிறன்று வயநாடு மாவட்டம் மானந்தவாடி பையம்பள்ளி கூடல் கடவில் தடுப்பணையை பார்க்க வந்த இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, பழங்குடியின இளைஞர் மதன் என்பவரை சுற்றுலா பயணிகள் காரில் சாலையோரம் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றனர். இந்த சம்ப வத்தில் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வயநாடு மாவட்ட காவல்துறைத் தலை வருக்கு அமைச்சர் ஓ.ஆர்.கேளு உத்தரவிட்டார். மாத்தன் சிறப்பு சிகிச்சைக்காக மானந்தவாடி மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப் பட்டார். பழங்குடியின இளைஞர்க ளுக்கு எதிரான தாக்குதல் மிகவும் தீவிர மாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று அமைச்சர் ஓ.ஆர்.கேலு கூறினார். வயநாடு பழங்குடியினர் இளைஞர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.