புதுதில்லி, மே 19 - “ஜிஎஸ்டி கவுன்சில் என்பது அரசியல் போட்டிகளுக்கான இடமாக மாறியிருப்ப தாகவும், இது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது” என்றும் உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. மேலும், “வரி விதிப்பு விஷயங்களில் சட்ட மியற்ற ஒன்றிய - மாநில அரசுகள், இரண்டு க்குமே சம அதிகாரம் இருக்கிறது” என்றும் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கடல் வழியாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கடல்வழி பொருள் இறக்கு மதியாளர்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், “கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) அரசியலமைப்புக்கு முரணா னது என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதி மன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமை யிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், வியாழனன்று தீர்ப்பு வழங்கப் பட்டது. அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் கூறிய தாவது: “வரிவிதிப்பில் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு பிரத்தியேக அதிகாரங்கள் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளன. அரசியல் சாசனப் பிரிவு 246-ஏ மற்றும் 279-ஏ-இன் படி வரி விதிப்பு விஷயங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான அதிகாரம் சம அளவில் உள்ளது. அரசியலமைப்பின் 246-ஏ மாநிலத்தை யும் ஒன்றியத்தையும் சமமாகத்தான் கருது கிறது. 279-ஏ மாநிலமும் ஒன்றியமும் ஒன்றை யொன்று சாராமல் செயல்பட முடியாது என்ற கூட்டாட்சித் தத்துவத்தைசுட்டிக்காட்டுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலில் வாக்களிக்கும் கட்டமைப்பு என்பது 1/3 என்ற விகிதாச்சாரம் ஒன்றிய அரசுக்கும், 2/3 விகிதாச்சாரம் மாநில அரசுகளுக்கும் உள்ளது.
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் என்பது அரசியல் போட்டி களுக்கான இடமாகவும் மாறி உள்ளது. இது இந்தியாவின் கூட்டாட்சி தத்து வத்தை பாதிக்கிறது. ஜிஎஸ்டி விவகாரங் களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளு மன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றங் களுக்கும் சம உரிமையே உள்ளது. குழப்பத்தை தவிர்ப்பதற்காகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தில் ஒன்றிய அரசுக்கு சற்று அதிகமான அதிகாரத்தை வழங்குகிறது. ஆனால் இந்தியக் கூட்டாட்சி என்பது மாநிலமும் ஒன்றிய அரசும் எப்போதும் ஒருங்கிணைந்து உரையாடக்கூடிய இடமாகும். ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. எனவே ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டால் ஜிஎஸ்டி கவுன்சில் தகுந்த ஆலோசனையை வழங்க முடியுமே தவிர, ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய மற்றும் மாநில அரசு களை கட்டுப்படுத்தாது. ஒன்றிய, மாநில அரசு களுக்கிடையே பிரச்சனை எழும் நேரத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் மிகவும் இணக்கமாகவே நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.