ஓணம் பண்டிகையையொட்டி தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து ஆக.26 காலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். கொச்சுவேலியில் இருந்து ஆக.27 இரவு 11.40க்கு புறப்பட்டு மறுநாள் 2.45க்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.