காதலிப்பதுபோல் நடித்து நண்பனுக்கு விஷம் கலந்த பானம் கொடுத்து கொலை செய்த வழக்கில் கிரீஸ்மாவுக்கு தூக்குத் தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரது தாய்மாமன் நிர்மல குமாரன் நாயருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை யும் விதிக்கப்பட்டுள்ளது. ஷாரோன் ராஜ் அக்டோபர் 14, 2022 அன்று தமிழ்நாட்டை ஒட்டியுள்ள பாற சாலாவுக்கு அருகிலுள்ள ஜே.பி.பவ னில் உள்ள கிரீஸ்மாவின் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டார். “போதைப்பொ ருள் சவால்” என்ற போர்வையில், அவர் பானத்தில் (மாம்பழக்கூழ்) பூச்சிக் கொல்லியைக் கலந்து அவருக்குக் கொடுத்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அக்டோபர் 14, 2022 அன்று கிரீஷ்மா கொடுத்த பானத்தை குடித்த பிறகு நோய்வாய்ப்பட்ட ஷாரோன், சிகிச்சை பெற்று வந்த நிலை யில் 25 ஆம் தேதி இறந்தார். ஜோதிட கதைகள்... ஷாரோன் கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள நெய்யூரில் உள்ள கல்லூரி யில் பிஎஸ்சி கதிரியக்கவியல் இறுதி யாண்டு மாணவராக இருந்தார். கல்லூரி மாணவியான கிரீஷ்மாவும் ஷாரோனும் பேருந்து பழக்கத்தில் நண்பர்களாயினர். 2021 இல் வீட்டிலும், தேவாலயத்திலும் வைத்து தாலி கட்டினார். கிரீஷ்மாவின் முதல் கணவர் இறந்துவிடுவார் என்று ஜோதிடர் கூறியதை நம்பி, ஷாரோனை விலக்க முயன்றார். மற்றொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், ஷாரோன் விலகிச் செல்ல மறுத்ததால் மெதுவாக கொல்லும் விஷம் கொடுத்து இயல்பான மரணம் போல் சித்தரிக்க முயன்றார். நீதிபதி முன் தனது மரண வாக்குமூலத்தை அளிக்கும் போது கிரீஷ்மா கொடுத்த மருந்தைக் குடித்துவிட்டதாக சொன்னவர், கிரீஷ்மா தனக்கு தீங்கு விளைவிப்பாள் என்று நினைக்கவில்லை என்று கூறியிருந்தார். தடயவியல் மருத்துவர் வழங்கிய அறி வியல் சான்றுகளை மிக முக்கிய ஆதார மாக கொண்டு கிரீஷ்மாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது விஷம் கலந்த பானம் கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் ஜனவரி 25, 2023 அன்று போலீ சார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த னர். கடந்த ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கிய விசாரணை இம்மாதம் நிறைவடைந்தது. ஜனவரி 17 வெள்ளி யன்று தீர்ப்பளித்த நீதிபதி கிரீஷ்மாவும், அவரது மாமா நிர்மல குமாரன் நாயரும் குற்றவாளிகள் என அறவித்தார். ஜனவரி 20 திங்களன்று இருவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.