states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

செப்டம்பர் 25 எனது தாயார் கல்பகம் யெச்சூரி அவர் களது இரண்டாம் ஆண்டு நினைவு நாள். அம்மாவுடனான நினைவு களை எண்ணிப் பார்க்கிறேன். இந்த நாளில் அவரது உருவப்படத்தை வைத்து ஏராளமான பெண் குழந்தைகள்  அஞ்சலி செலுத்தியது நெகிழ்வாக இருந்தது. அவர் தனது இல்லத்தையே மாற்றுத் திறனாளி பெண் குழந்தைகளுக்காக செயல்படும் ஒரு பள்ளியாக மாற்றியவர். அந்த இடத்திலேயே அவருக்கு, அவரால் வளர்க்கப்பட்ட குழந்தைகள் அஞ்சலி செலுத்தினார்கள்.