சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
அன்சல் ரியல் எஸ்டேட் குழுமம் பிரம்மாண்ட முறைகேட்டை அரங்கேற்றியுள்ளது. அன்சல் குழுமம் தவறு செய்தது என்று தெரிந்தும், புல்டோசரை அனுப்புவதற்குப் பதிலாக உத்தரப்பிரதேச பாஜக முதலமைச்சர் ஆதித்யநாத் அந்நிறுவனத்தின் திறப்பு விழாவிற்கு ஏன் சென்றார்? இதற்கு பாஜக விளக்கம் அளிக்குமா?
தெலுங்கானா அமைச்சர் பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தெற்கிற்கு தீங்கு விளைவிக்கவே விரும்புகிறது. வடக்கில் அதிகரிக்கும் தொகுதிகளைப் போலவே, தென்னிந்தியாவில் தொகுதிகளின் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில் அதிகரிக்க வேண்டும். ஆனால் தொகுதி மறுசீரமைப்பை ஒருபோதும் ஏற்கமாட்டோம்.
கன்னட வளர்ச்சி ஆணையர் புருஷோத்தம்
தாய் மொழியைக் காக்க வேண்டுமென்றால், இருமொழி கல்விக் கொள்கையை பின்பற்ற வேண்டும். குறிப்பாக மொழிக் கொள்கையில் தமிழ்நாட்டை பின்பற்ற வேண்டும். அதாவது கர்நாடகாவில் இருமொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் லண்டன் சந்திப்புக்குப் பிறகு காலிஸ்தானி ஆர்ப்பாட்டக்காரர்களால் ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் கண்டனத்துக்குரியது. இந்த பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கு இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.