தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு
தொழிற்சங்கங்களின் கருத்துக்களை மறுதலித்து எதிர்ப்புகளையும் மீறி முதலாளிகள், அரசு பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று இபிஎப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இது மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையையே காட்டுகிறது எனில் மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் குரலெழுப்ப வேண்டுமெனவும் சிஐடியு கேட்டுக்கொண்டுள்ளது. இபிஎப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது தொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் விடுத்துள்ள அறிக்கை:- பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தொடர்ந்து தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இபிஎப் வாரிய மத்திய அறங்காவலர் குழுவில் உள்ள அரசுப் பிரதிநிதிகளும், முதலாளிகளும் இபிஎப் வட்டி விகிதத்தைக் குறைக்க வலியுறுத்தினர்.
இதையடுத்து தற்போதைய 8.5 சதவீத வட்டி விகிதத்தை 8.1 சதவீதமாக குறைக்க பரிந்துரை செய்ய வாரியம் முடிவு செய்துள்ளது. 2021-22 நிதியாண்டிற்கான இபிஎப் வட்டி விகிதங்களைக் குறைக்க பரிந்துரைக்கும் வாரியத்தின் “பெரும்பான்மை” முடிவை இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு) வன்மையாகக் கண்டிக்கிறது. 2022 மார்ச் 11 மற்றும் 12 தேதிகளில் கவுஹாத்தியில் நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இபிஎப் வாரியத்தின் மத்திய அறங்காவலர் குழுவில் உள்ள அனைத்து ஊழியர் பிரதிநிதிகளும் ஒருமித்த குரலில் இதை எதிர்த்தனர், இருப்பினும் வாரியம், அரசு மற்றும் முதலாளிகளின் பிரதிநிதிகளது முன்மொழிவின் அடிப்படையில் வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இபிஎப் என்பது சமூகப் பாதுகாப்பின் ஒரு பகுதியாகவும் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பாகவும் இருப்பதால், வங்கிகளில் உள்ள மற்ற வைப்புத் தொகைகளின் வட்டி விகிதங்களுக்கு இணையாக இதை நடத்த வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் வாதம். வங்கித் துறையில் உள்ள மற்ற டெபாசிட்களுடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதங்களிலிருந்து இபிஎப் வட்டிவிகிதத்தை வித்தியாசப்படுத்த வேண்டும். இபிஎப் வட்டி குறைப்பு உள்ளிட்ட மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோடி தலைமையிலான பாஜக அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக வரும் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுதில்லி, மார்ச்.13- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) வட்டி விகிதம் 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத் தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற இபிஎப் வாரிய அறங்காவலர் குழு கூட்டத்தில், 8.1 சதவீத வட்டி அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி 8.50 சதவீத மாக நீடித்த நிலையில், தற்போது 8.1 சதவீத மாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய தொழி லாளர் அமைச்சகத்தின் வட்டிக் குறைப்பு முடிவுக்கு ஒன்றிய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்ததும் இது நடைமுறைப்படுத்தப்படும். இதுதொடர்பாக ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறிய தாவது: சர்வதேச நிலவரம் மற்றும் சந்தை நிலவரத்தை மனதில் கொண்டு வட்டி விகிதம் இறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சூழ்நிலை யை மதிப்பாய்வு செய்த பிறகே 8.1 சதவீத வட்டி விகிதத்தை பரிந்துரை செய்துள்ளோம். சமூக பாதுகாப்பு மற்றும் சந்தை ஸ்திரத்தன்மையை இரண்டையும் கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தொடரும் வட்டி விகித வீழ்ச்சி
இது கடந்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டி விகித அளவுக்குக் குறைவாகும். 1977-78ஆம் ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீத வட்டி வழங்கப்பட்டது. கிட்டதட்ட அதே நிலைக்கு தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி முதலீடுகளுக்கு ஒன்றிய அரசு அதிக வட்டி வழங்கி வந்தது. 2015-16ஆம் ஆண்டில் சந்தாதாரா்களுக்கு அதிக பட்சமாக 8.8 சதவீத வட்டி வழங்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு வட்டி விகிதம் படிப்படி யாக குறைக்கப்பட்டு, 2016-17 ஆம் ஆண்டில் 8.65 சதவீதமும், 2017-18 ஆம் ஆண்டில் 8.55 சதவீதமும், 2018-19 ஆம் ஆண்டில் 8.65 சதவீத மும், 2019-20 ஆம் ஆண்டில் 8.5 சதவீதமாக வும், 2020-21 ஆம் ஆண்டில் 8.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.
24.77 கோடி உறுப்பினர்கள்
பிஎப் நிதித் திட்டத்தில் மொத்தம் 24.77 கோடி தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ள னர். இதில் 14.36 கோடி பணியாளர்களுக்கு தனித்துவ அடையாள எண் (யுஏஎன்) வழங்கப்பட்டுள்ளது. 2019-20-ம் நிதி ஆண்டில் 5 கோடி தொழிலாளர்கள் தங்களது பிஎப் நிதியில் கூடுதல் நிதியை செலுத்தியுள்ளனர். மாத சம்பளம் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் பெறும் பணியாளர்கள் அனைவரும் பிஎப் நிதி யில் இணைக்கப்பட வேண்டியது கட்டாய மாகும். 20 பேருக்கு மேல் ஊழியர்கள் உள்ள நிறு வனங்கள் ஊழியர்களின் பங்களிப்பாக அவர் களது அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதமும், நிறுவனங்களின் பங்களிப்பாக 12 சதவீதமும் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். தொழி லாளர் ஓய்வூதியச் சட்டம் 1995-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. 2015-16-ம் நிதி ஆண்டு முதல் பங்குச் சந்தை யில் பகுதி அளவில் பிஎப் நிதி முதலீடு செய்யப் படுகிறது. அதிக சந்தை பாதிப்புக்குள்ளாகாத பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யப் படுவதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகபட்ச வரம்பு 15 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதிகபட்சம் 65 சதவீத தொகை அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
யெச்சூரி கண்டனம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை ஒன்றிய அரசு 8.1 சதவீதமாக குறைத்த தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: சட்டமன்ற தேர்தல்கள் முடிந்தவுடன் மோடி அரசாங்கம் வன்மத்துடன் தாக்குதல்களை தொடர்கிறது. இத்தகைய தாக்குதல்கள் வேலையின்மை/விலை உயர்வு காரணமாக ஏற்கெனவே மக்கள் துன்பப்படும் பின்ன ணியில் வருகின்றன. நமது வலிமை முழுவதை யும் பயன்படுத்தி இந்த தாக்குதல்களை முறியடிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.