states

img

பாஜக-வின் ‘இந்துத்துவா’ ஒரு கள்ளச் சந்தை!

சிவசேனாவின் சாம்னா ஏடு விமர்சனம்

மும்பை, டிச. 24 - அயோத்தியில் ராமர் கோயில்  கட்டுவதற்கு அனுமதி வழங்கி 2019 நவம்பர் 9 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குப் பிறகு, பாஜக- வின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் கள், எம்எல்ஏ-க்கள், மாநில அரசு அதி காரிகள் மற்றும் அவர்களின் உற வினர்கள் அயோத்தியில் ஏக்கர்  கணக்கில் நிலங்களை வாங்கிக் குவித்திருப்பதை ‘இந்தியன் எக்ஸ் பிரஸ்’ ஏடு, கடந்த  புதன்கிழமையன்று அம்பலப்படுத்தியது. அயோத்தி பாஜக மேயர் ரிஷி கேஷ் உபாத்யாய், அயோத்தி நகர எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தா, இப்போது தகுதி நீக்கம் செய்யப் பட்டுள்ள கோசைகஞ்ச் பாஜக எம்எல்ஏ  இந்திரா பிரதாப் திவாரி என்ற கப்பு  திவாரி உள்ளிட்டோர் இதில் முக்கிய மானவர்கள்.  இது எதிர்க்கட்சியினர் மத்தியில் மட்டுமன்றி, இந்துத்துவா ஆதரவு கொள்கை கொண்ட சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் மத்தியிலும் பெரும் முட்டல் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அயோத்தி ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி யுள்ள பாஜக தலைவர்கள் குறித்து,  சிவசேனா தனது சாம்னா பத்திரிகை யில் தலையங்கம் ஒன்றை எழுதி யுள்ளது. அதில் கூறப்பட்டிருப்ப தாவது: பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலை வர் மோகன் பகவத், உ.பி. முதல்வர் ஆதித்யநாத் ஆகியோர் முன்னி லையில் பூமி பூஜை நடைபெற்ற அதே நேரத்தில் பாஜக-வில் இருக்கும் வர்த்தகர்கள் கோவில் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்திற்கு மிக  அருகே ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை கோவில் அறக்கட்டளை 70 ஏக்கர் நிலத்தை கோவில் கட்டுமானத் திற்காக கைப்பற்றியுள்ளது. அதே நேரம் பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் காவல்துறையினர், கட்சிக்கு நெருக்க மானவர்கள் பலர் பெரிய அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள் ளனர். எப்படி அவர்கள் நிலம் வாங்கி யுள்ளனர் என்பதையும், அவர்கள் வாங்கியுள்ள நிலத்தின் மதிப்பு என்ன என்பதையும் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ கோடிட்டுகாட்டியுள்ளது.

இதன்மூலம் அயோத்திக்காக யார் ரத்தம் சிந்தினார்கள், யார் இதற்காக இறந்தார்கள்? இப்போது யார் இதில் லாபம் பார்க்கின்றார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அயோத்தி மேயர் சில லட்சங் களுக்கு ஒரு நிலத்தை வாங்கி அடுத்த  பத்து பதினைந்து நிமிடங்களில் ராம ஜென்மபூமிக்கு ரூ. 16 கோடிக்கு விற் பனை செய்துள்ளார்.

அந்த மேயரும் பாஜகவை சேர்ந்தவர்தான். இது ராமர் பெயரில் நடக்கின்ற கள்ளச் சந்தை. யாரேனும் இதனை ‘இந்துத்துவா’ என்று அழைத்தால் கைகளைக் கட்டிக் கொண்டு அவர்களின் கால் களில் விழுந்துவிட வேண்டும். பாஜகவின் இந்துத்துவாவில் ராம ருக்கு இடம் இல்லை. வணிகத்திற்கு மட்டும்தான் இடம் இருக்கிறது என் பதையே இந்த செய்தி சுட்டிக்காட்டு கிறது. ராம் நாம் சத்யா ஹெய் என்பது மற்றவர்களுக்குதான். பாஜக-விற்கு அதிகாரமும் பணமும்தான். இவ்வாறு சிவசேனா குறிப்பிட்டுள்ளது.