states

img

எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்க வேண்டும் - காங்கிரஸ் தீர்மானம்

புதுதில்லி, ஜூன் 8- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை  ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என காங்கிரஸ்  செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் செயற்குழு கூட்டம், அக்கட்சி யின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை யில் தில்லியில் சனிக்கிழமையன்று நடைபெற் றது. மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்  காந்தி, பொதுச்செயலாளர்கள் கே.சி. வேணு கோபால், பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ்,  மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், அம்பிகா சோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்திற்குப் பின், காங்கிரஸ் பொதுச்  செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியா ளர்களைச் சந்தித்தார். அப்போது, “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என காங்கிரஸ் செயற்  குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உள்ளது. இந்தக் கூட்டணியை மக்களவையில் வழிநடத்திச் செல்ல ராகுல் காந்தி சிறந்த தேர்வாக இருப்பார்” என்று தெரி வித்தார். “ராகுல் காந்தி இந்த முடிவை ஏற்றுக் கொள்  வாரா?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு  கே.சி.வேணுகோபால், “ராகுல் காந்தி இதன் மீது விரைவில் முடிவெடுப்பார்” என்று கூறி யுள்ளார்.

மொத்த மக்களவை உறுப்பினர்களில் 10 சத விகித உறுப்பினர்களைக் கொண்டிருந்தால் மட்டுமே அந்தக் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். ஆனால், மொத்தம் 543 உறுப்பினர் களைக் கொண்ட மக்களவையில், 2014 மற்றும்  2019 தேர்தல்களில் முறையே 44, 52 என்ற உறுப்பி னர்களை மட்டுமே காங்கிரஸ் பெற்றதால், கடந்த  10 ஆண்டுகளாக- அதிகாரப்பூர்வ எதிர்க் கட்சியே இல்லாத ஆட்சியை மோடி நடத்தி வந்தார். ஆனால், தற்போது 99 இடங்களைப் பெற்றுள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்துள்ளது.  இதனடிப்படையில் ராகுல் காந்தி, மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கும் பட்சத்தில், கேபினட் அமைச்சருக்கு இணை யான அந்தஸ்தைப் பெறுவார். நாடாளுமன்றத் தில் அமைக்கப்படும் பொதுக் கணக்கு, பொதுத்  துறை நிறுவனங்கள், பல்வேறு நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களின் உறுப்பினராக இருப்பார்.  சிபிஐ, மத்திய தகவல் ஆணையம், மனித  உரிமை ஆணையம், லோக்பால் உள்ளிட்டவற் றின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் குழு விலும் எதிர்க்கட்சி தலைவர் இடம் பெறுவார். முன்னதாக கூட்டத்தில் கட்சியின் தலைவ ரான மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், “தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை காங்கி ரஸ் பணிவுடன் ஏற்கிறது. நாட்டின் பெரும் பகுதி  மக்கள் காங்கிரசை நம்பியுள்ளனர். அவர்களின் நம்பிக்கையை நிலைநாட்ட அனைத்து முயற்சி களையும் மேற்கொள்வோம்” என்று கூறினார். “இந்த தருணத்தில், ‘இந்தியா’ கூட்டணி யில் இடம் பெற்றுள்ள கட்சிகளைப் பாராட்ட விரும்புகிறேன். வெவ்வேறு மாநிலங்களில் உள்ள அனைத்து கூட்டணி கட்சிகளும் முக்கிய  பங்கைக் கொண்டிருந்தனர்” என்று குறிப்பிட்ட கார்கே, “நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து ஒற்று மையாக ஒன்றாக காங்கிரஸ் செயல்படும்” என்றும் குறிப்பிட்டார்.