புதுதில்லி, ஆக. 10 - நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி வியாழனன்று எதிர்க் கட்சிகளுக்கு பதிலுரை ஆற்றினார். ஆனால், அந்த பதிலுரை பிரதமர் மோடியின் வழக்கமான வாய்ச்சவடால் உரையாகவும், குறிப்பான விஷயங் களுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்லும் வெற்று உரையாகவுமே அமைந்து போனது. தனது உரையின் முதல் ஒன்றரை மணிநேரத்தில் மணிப்பூர் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் மோடி பேச வில்லை. இதற்கு கண்டனம் தெரி வித்து, எதிர்க்கட்சிகள் மக்களவையி லிருந்து வெளிநடப்பு செய்த பின்னர், எதிர்க்கட்சிகளே இல்லாத நேரம் பார்த்து மணிப்பூர் குறித்து ஓரிரு சம்பிர தாய வார்த்தைகளுடன் பிரதமர் மோடி தனது பதிலுரையை முடித்துக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
3 நாள் விவாதம்
மணிப்பூரில் பழங்குடி பெண் களுக்கு இழைக்கப்பட்ட கும்பல் வல்லு றவுக் கொடுமைகளும், வன்முறை களில் 160-க்கும் அதிகமானோர் உயிரி ழந்த சம்பவங்களும், 60 ஆயிரம் பேர்கள் வரை அகதிகளாக நிவாரண முகாம்களில் அடைப்பட்டுள்ள துயரங்களும் நாட்டையே உலுக்கின. இந்நிலையில், மணிப்பூர் வன் முறைகள் தொடர்பாக, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. பிரதமர் மோடி யை பதிலளிக்குமாறு அவை விதி எண்: 267-இன் கீழ் நோட்டீஸ்களை அளித்தனர். பிரதமரை நாடாளு மன்றத்திற்கு வரச்சொல்லுங்கள் என்று மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஜூலை 20 துவங்கி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரில் ஒருநாள் கூட மோடி அவைக்கு வரத் தயாரில்லை. இதையடுத்தே காங்கிரஸ் மக்கள வைக்குழு துணைத் தலைவர் கவுரவ் கோகோய், பிஆர்எஸ் கட்சியின் நாகேஸ்வர ராவ் ஆகியோர் கடந்த ஜூலை 26 அன்று மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸை வழங்கினர்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்றா லும், ஒன்றிய பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் பட்சத்தில், பிரதமர் நரேந்திர மோடி கட்டாயமாக நாடாளு மன்றத்திற்கு வந்துதான் ஆக வேண் டும்; மணிப்பூர் தொடர்பான குற்றச் சாட்டுக்களுக்குப் பதிலளித்து பேசித் தான் ஆக வேண்டும் என்பதால், நம்பிக்கையில்லாத் தீர்மான வியூகத்தைக் கையில் எடுத்தனர். அதன்படி ஆகஸ்ட் 8, 9 ஆகிய தேதி களில் மக்களவையில் விவாதம் நடை பெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மக்களவைக் குழுத் துணைத் தலைவர் கவுரவ் கோகோய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஏ.எம். ஆரிப், இதேபோல டி.ஆர். பாலு, கனிமொழி கருணாநிதி (திமுக), சவுகதா ராய் (திரிணாமுல்), சுப்ரியா சுலே (என்சிபி), டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி), அர விந்த் சாவந்த் (சிவசேனா), கே. சுப்ப ராயன் (சிபிஐ), தொல். திருமாவள வன் (விசிக), மணீஷ் திவாரி (காங்கிரஸ்) உள்ளிட்டோர் பேசினர்.
மோடி பதிலுரை
இந்நிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதி லுரை என்ற பெயரில் பிரதமர் மோடி வியாழனன்று மாலை 5 மணிக்கு உரை யாற்றத் துவங்கினார். கடந்த இரண்டு வாரங்களில் முதன்முறை யாக இன்றுதான் அவர் நாடாளு மன்றத்திற்கு வந்தார். “நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கானது அல்ல, எதிர்க்கட்சி களுக்கானது. கடவுள் மிகவும் அன்பா னவர், அவர் கொடுத்த சமிக்கைதான் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம். இது கடவுளின் ஆசீர்வாதம் என்று நான் நம்புகிறேன். 2018 ஆம் ஆண்டு நம்பிக்கை யில்லாத் தீர்மானத்திலும் இப்படித் தான் நடந்தது. அதற்கு அடுத்து நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்தனர். அதேபோல 2023 நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் பிறகு, வரும் 2024 தேர்தலிலும் பாஜ கவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் அதிக இடங்களில் வெற்றி பெறும். எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம் எப்போதுமே எங்களுக்கு ராசியானதுதான். 2024 தேர்தலில் இது வரை வெல்லாத இடங்களில் எல்லாம் வென்று புதிய சாதனை படைப்போம். பெங்களூரில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் பட்டுவிட்டது. பெயரை மாற்றினாலும் இந்தியா கூட்டணியால் வெற்றி பெற முடியாது. ஏழைத்தாயின் மகன் பிரத மராக இருப்பதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான பதிலை, தேர்தல் பொதுக்கூட்டமாக மோடி மாற்றினார்.
வெளிநடப்பு
இதையடுத்து, ‘மணிப்பூர் பற்றி பேசுங்கள்’.. ‘மணிப்பூர் பற்றி பேசுங் கள்’ ... என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்ட னர். அப்போதும் பிரதமர் மோடி “மணிப் பூர் பற்றி பேசாததைக் கண்டித்து, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். இதையடுத்து எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாத நேரமாக பார்த்து, மணிப்பூர் பற்றி பேசத்துவங்கிய மோடி, மணிப்பூருடன் நாம் அனைவரும் நிற்கிறோம், மணிப்பூரில் அமைதி திரும்ப அமித்ஷா நடவடிக்கை எடுத்துள்ளார். மணிப்பூரில் விரைவில் அமைதி நிலைநாட்டப்படும். ஒன்றிய -மாநில அரசுகள் இரண்டும் மணிப்பூரில் அமைதி திரும்ப பணிகளை செய்து கொண்டு இருக்கின்றன. மணிப்பூர் மக்களுடன் இந்த அரசு உடன் இருக் கிறது. மணிப்பூரில் பெண்களுக்கு தீங்கிழைத்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்” (இதனை ஜூலை 20 அன்று 36 விநாடி பேட்டியிலேயே கூறி விட்டார்) என்றார். பின்னர் மீண்டும் பிரச் சாரத்திற்குத் தாவிய பிரதமர் மோடி, எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணமே நேருதான் என்று வழக்கம் போல பழிதூற்றினார்.