ஓடிடி, சமூக ஊடகங்களில் ஆபாச காட்சிகள்
ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ஓடிடி பிளாட்பார்ம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் ஆபாச திரைப்படங்கள், இணை யத் தொடர்கள், வீடியோக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொ டரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் அமர்வில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்க றிஞர்,”சமூக ஊடகங்களில் எந்த கட்டுப் பாடும் இல்லாமல் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பான முழுப்பட்டியலும் இணைக் கப்பட்டுள்ளது” என ஆதாரங்களை சமர்ப்பித்தார். ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இதுபோன்ற காட்சிகளால் குழந்தை கள் பாதிக்கப்படுவது கவலை அளிக்கி றது. இதனைத் தடுக்க சில விதிமுறைகள் நடைமுறையில் இருக்கின்றது. மேலும் சில பரிசீலனை செய்யப்பட்டு வரு கின்றது” என்றார். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்,”அமேசான் ப்ரைன், நெட் பிளிக்ஸ், ஜியோ ஹாட் ஸ்டார், உல்லு உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்களுக்கும், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் எக்ஸ் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கும், ஒன்றிய அரசுக்கும் பதிலளிக்க நோட் டீஸ் அனுப்ப வேண்டும்” என உத்தர விட்டார்.
537 பாகிஸ்தான் மக்கள் வெளியேற்றம்: 850 இந்தியர்கள் நாடு திரும்பினர்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பங்கர வாத தாக்குதலுக்கு பாகிஸ்தா னின் நேரடி தொடர்பு இருப்பதால், இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ் தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட குறுகிய கால விசாக்களை ஒன்றிய அரசு ரத்து செய்தது. மேலும், அவர்களை உடன டியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித் தது. இதன் விளைவாக ஏப்ரல் 24 முதல் ஞாயிறன்று வரை நான்கு நாட்களில் 9 தூதரக அதிகாரிகள் உட்பட 537 பாகிஸ் தான் குடிமக்கள், பஞ்சாப்பில் உள்ள அட்டாரி - வாகா எல்லை வழியாக இந்தி யாவை விட்டு வெளியேறியுள்ளனர். இதே காலகட்டத்தில், 14 தூதரக அதிகாரிகள் உட்பட 850 இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்கு திரும்பியுள்ள னர்.