ஆந்திர மாநிலத்தின் போலவரம் திட்டத்திற்காக 392 பழங்குடியின கிராமங்களில் 1.06 லட்சம் குடும்பங்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தேசிய திட்டம் என்பதால் மோடி அரசு முதன்மை பொறுப்பை ஏற்கும் நிலையில், அரசியலமைப்பின் 5-வது அட்டவணையின் கீழ் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013-இன் படி தேவையான நிதி வழங்கி மறுவாழ்வு அளிக்கக் கோரி தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநிலக் குழு சார்பில் தர்ணா நடத்தப்பட்டது. இந்த தர்ணா போராட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், அசோக் தாவ்லே, ஆந்திர மாநில செயலாளர் சீனிவாசராவ், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.வெங்கட், ஜிதேந்திர சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர்.