புதுதில்லி, அக். 19 - பாலஸ்தீன அதிகார சபை யின் தலைவர் முகமது அப்பாசுடன் வியாழக்கிழமை யன்று பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். காசாவில் உள்ள அல்-அஹில் மருத்துவமனையில் நடத்தப்பட்ட குண்டு வீச்சில் உயிரிழந்த பொது மக்களுக்கு இரங்கலைத் தெரிவித்தார். இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்திப் பேசிய பிரதமர் மோடி, பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து அனுப்புவது குறித்தும்; பயங்கரவாதம், வன்முறை மற்றும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்தும் தனது ஆழ்ந்த கவலையை பகிர்ந்து கொண்டதாகவும், இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால கொள்கை நிலைப்பாட்டையே தொடர்வதாக அப்பாஸிடம் தெரிவித்ததாகவும் தமது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.