திருவனந்தபுரம் விழிஞ்ஞம் சர்வதேச துறை முகத்தில் முதலாவது சரக்கு கப்பல் சான் பெர் னாண்டோ புதனன்று இரவு நஞ்கூர மிட்டு நிறுத்தப்பட்டது. உலகின் இரண்டாவது பெரிய கப்பல் நிறுவ னமான Maersk இன் தாய்க்கப்பல் இது. விழிஞ்ஞத்தில் நங்கூரமிட்டு புதிய வரலாற்றை துவக்கியுள்ளது. ஜுலை 11 வியாழனன்று காலை முறைப்படி கப்பல் நிறுத்தம் நடை பெறும். பின்னர் கப்பலில் இருந்து கொள்கலன்கள் (கண்டெய்னர் கள்) இறக்கப்படும். இந்த கப்பலை வெள்ளின்று காலை 10 மணிக்கு முதல்வர் பினராயி விஜயன் வர வேற்கிறார். பரிசோதனை முறை யில், திறப்பு விழாவுக்கு முன், கன் டெய்னர்கள் துறைமுக தளத்தில் இறக்கப்படும். அன்று மாலையே துறைமுகத்தில் இருந்து கப்பல் திரும்பும். சீனாவில் உள்ள ஜியா மென் துறைமுகத்தில் இருந்து புறப் பட்ட இந்த கப்பல் 300 மீட்டர் நீளமும் 48 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த கப்பலில் 9 ஆயிரம் கொள் கலன்களை கொண்டு செல்ல முடி யும். இது குறித்து அமைச்சர் வி.என். வாசவன் கூறியதாவது: விழிஞ்ஞத்தில் இறக்கப்படும் சரக்கு கொல்கத்தா மற்றும் மும்பை துறைமுகங்களுக்கானது. ஃபீடர் கப்பல்கள் மரின் அஸூர் மற்றும் சீஸ்பான் சாண்டோஸ் ஆகியவை சரக்குகளை எடுத்துச் செல்ல சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வரும். இரண்டு மாதங்களுக்கு சோதனை ஓட்டம் நடைபெறும். துறைமுகத்தின் வர்த்தக நட வடிக்கை அக்டோபர் மாதம் தொடங் கும். விழிஞ்ஞம் நாட்டிலேயே முதல் அரை தானியங்கி (செமி ஆட்டோ மேட்டட்) கொள் கலன் துறைமுகமா கும். இங்கு முக்கியமாக டிரான்ஸ் ஷிப்மென்ட் கொள்கலன்கள் கையாளப்படுகின்றன. டிரான்ஸ்ஷிப்மென்ட் என்றால் என்ன? டிரான்ஸ்ஷிப்மென்ட் என்பது துறைமுகத்தில் ஒரு கப்பலில் இருந்து சரக்குகளை இறக்கி மற் றொரு கப்பலில் ஏற்றுவதாகும். உதாரணமாக, ஏற்கனவே, மும்பை யில் இருந்து சிங்கப்பூர் செல்லும் கப்பல் கொழும்பில் நின்று சரக்கு களை இறக்கி, தாய்க் கப்பலில் ஏற்றி சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்கி றது. தற்போது இந்தியாவில் இருந்து வரும் கப்பல்கள் பொது வாக கொழும்பை அடைந்து அங்கி ருந்து வேறு கப்பலில் சரக்குகளை கொண்டு செல்கின்றன. தாய்க்கப் பல்கள் வந்து செல்லும் துறைமுகங் கள் இல்லாததே இதற்குக் காரணமாகும். விழிஞ்ஞம் துறை முகம் நிஜமாகும்போது இந்த நிலை மாறும். நேரத்தை மிச்சப்படுத்து வதுடன், வெளிநாடுகளுக்கு போகும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.