states

img

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ மூலம் மோடி அரசு சமூகப் பிரிவினையைத் தூண்டுகிறது!

ஸ்ரீநகர், மார்ச் 17- ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற் கான மோடி அரசின் ஆக்ரோஷ மான பிரச்சாரம், பழைய காயத்திற்கு மருந்திடாமல், சமூகப் பிரிவினை யைத் தூண்டுவதாக உள்ளது என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வ ரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கூறி யுள்ளார். காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்டுகளை குறிவைத்து தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தியதை யும், தீவிரவாதிகளின் எச்சரிக்கை யைத் தொடர்ந்து பண்டிட்டுகள் அங்கிருந்து வெளியேறிய சம்ப வங்களையும் அடிப்படையாக கொண்டு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற படம் கடந்த வாரம் வெளியானது. ஆனால், படம் எடுக்கப்பட்ட வித மான முஸ்லிம்களுக்கு எதிராக, இந்துக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பதாக உள்ளது என்று விமர்ச னங்கள் எழுந்துள்ளன.

தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிர லுக்கு உதவியாக இருப்பதால், பாஜக ஆளும் மாநிலங்கள் இந்தப் படத் திற்கு வரிவிலக்கு அளித்திருப்பது டன், இலவசமாக படத்தை திரை யிட்டுக் காட்டி, மதவெறியைத் தூண்டி வருகின்றனர். பிரதமர் மோடி படக் குழுவினரை நேரடியாகவே அழைத்துப் பாராட்டியதோடு, பாஜக எம்.பி.க்கள் அனைவரும் படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். பாஜக மாநில முதல்வர்களும் இப்படத்துக்கு ஆத ரவாக பிரச்சாரம் செய்து வருகின்ற னர். இந்நிலையில், இப்படத்தின் மூலம் பாஜக பிரிவினையைத் தூண் டுவதாக ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார். ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை ஒன்றிய அரசு ஆக்ரோஷமாக ஊக்கு விப்பது காஷ்மீர் பண்டிட்டுகளின் வலியை ஆயுதமாகப் பயன்படுத் தும் அவர்களின் தவறான உள்நோக் கத்தை வெளிப்படுத்துகிறது. பழைய காயங்களுக்கு மருந்திடாமல் இரு சமூகத்தினரிடையே இணக்கமான சூழலை உருவாக்குவதற்குப் பதி லாக, அவர்கள் வேண்டுமென்றே பிரிக்கிறார்கள்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.