தில்லியில் பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் சுற்றுலா தலத்தில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்க ரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப் பான “தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்” என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குத லுக்கு பொறுப்பேற்று உள்ளது. இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருநாடு களுக்கும் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், பாதுகாப்புத் துறைக்கான நாடா ளுமன்ற நிலைக்குழு கூட்டம் திங்களன்று கூடியது. பயங்கரவாதிகளின் தாக்கு தலை தடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் ராதா மோகன் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.'
திருப்பதியில் கோர விபத்து
5 பேர் பலி
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பூத்தலப்பட்டு – நாயுடு பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாகாலா மண்டலம் தோட்டப்பள்ளி என்ற இடத்தில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கன்டெய்னர் லாரிக்கு அடியில் கார் சிக்கி கொண்டது. இதில் காரில் பயணம் செய்த 2 பெண் கள் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த வர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட விசார ணையில் தெரியவந்துள்ளது.
இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி பரவும் போலிச் செய்தி
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில்,”இந்திய ராணு வத்திற்கு நிதி தேவைப்படுகிறது ; ராணு வத்துக்கு தேவையான நிதியை அளித்து உதவுங்கள்” என்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் வெளி யாகியது. இந்நிலையில், இந்திய ராணுவத்து க்கு நிதி தேவைப்படுவதாக வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப் படும் செய்திகள் போலியானவை என்றும், அதில் எவ்வித உண்மையைத் தன்மையும் இல்லை என்றும் ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த போலியான தகவலை நம்பி இந்திய ராணுவத்துக்காக உதவுவதாக எண்ணி பொதுமக்கள் யாரும் தங்களது பணத் தை இழக்க வேண்டாம் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.