states

ஊராட்சித் தலைவரான மாதர் சங்க தலைவர் - பாஜக குண்டர்கள் வெறித் தாக்குதல்!

காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் தலசேரி பஞ்சாயத்து சமிதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட, கரஜ்கான் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா சிங்தா மற்றும் அவருடைய குடும்பத்தினரை பாஜக குண்டர்கள் கோழைத்தனமான முறையில் தாக்கியுள்ளனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான சுனிதா சிங்தா மற்றும்  அவரது குடும்பத்தினர் மீதான இந்த  தாக்குதலுக்கு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் (AIDWA) மத்தியக் குழு கண்டனம் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா மாநிலம், தானே -  பால்கர் மாவட்டத்தில் உள்ள தல சேரி மற்றும் தகானு வட்டங்களில்  சில கிராமங்களில் நவம்பர் 5 அன்று  கிராமப் பஞ்சாயத்துக்களுக்கான தேர்தல் நடைபெற்றன.  இத்தேர்தல்களில் பாஜக மிக வும் மோசமான முறையில் தோற்க டிக்கப்பட்டது. கரஜ்கான் உட்பட  பல கிராமங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகத்தான அள வில் வெற்றி பெற்றுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னணி ஊழி யர் சங்கீதா தோடாடே (Sangeeta Dhodade) என்பவரும் கிராமத் தலைவராக (Village Sarpanch) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத்  தலைவரும், முன்னாள் மத்திய செயற்குழு உறுப்பினருமான  லகானி தௌடா, தர்சனா போதாலே,  நிர்மலா பராலே, ரஞ்சனா சவுத்ரி  மற்றும் செலு துமதா ஆகிய மாதர்  சங்கத் தலைவர்களும் அவரவர் களின் கிராமப்பஞ்சாயத்துக்களில் தலைவர்களாக (Sarpanches) தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதனொரு பகுதியாகவே கராஜ்கான் கிராமத்தைச் சேர்ந்த வரும், அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கத்தின் மகாராஷ்டிர மாநில சிஇசி உறுப்பினருமான சுனிதா சிங்தா, தலசேரி தாலுகா பஞ்சாயத்து சமிதியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் மீதும், அவரது  குடும்பத்தினர் மீது, பாஜக குண்டர்  கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மை யாக கண்டிக்கிறது. இவ்வாறு மாதர் சங்கம் கூறி யுள்ளது. கராஜ்கான் கிராம மக்களும் நூற்றுக்கணக்கானோர், சம்பவத்  தன்று இரவே காவல் நிலையத்தை  முற்றுகையிட்டு, பாஜக குண்டர் களின் கொடூரமான தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு போராட்டம் நடத்தியுள்ளனர்.