states

img

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் பாக்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்   பாக்

சிந்து நதி நீர் ஒப்பந்தம்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா வுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித் துள்ளது. பஹல்காம் பயங்கர வாதத் தாக்குதலைத் தொ டர்ந்து ஏப்ரல் 23 அன்று பிரதமர் மோடி தலைமை யில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், எல்லை தாண் டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ் தான் நிறுத்தும் வரை, இந் தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்பது உட்பட 5 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப் பட்டன. பாகிஸ்தானின் குடிநீர் தேவையில் 70 சதவீதத்துக் கும் மேல் பூர்த்தி செய்யக் கூடிய நதியாக சிந்து நதி உள்ளது. மேலும் 80 சதவீத மான விவசாய நிலத்துக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது.   தற்போது இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே தொடர்ந்து 4 நாட்கள் நடந்த மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தான் பாகிஸ்தா னின் நீர்வள அமைச்சக செய லாளர் சையத் அலி முர்தசா, இந்தியாவின் நீர்வள செய லாளர் தேபஸ்ரீ முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இந்த கடிதம் ஒரு வாரத்திற்கு முன்பு வந்துள்ள தாகக் கூறப்படுகிறது. அதில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், இதற்காக பாகிஸ்தானின் சிந்து நதி ஆணையருடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடிய பிரதிநிதிகளை இந்தியா பரிந்துரைக்குமாறு பாகிஸ்தான் தரப்பில் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படு கிறது. 1960 முதல் நடைமுறை யில் உள்ள சிந்து நதி நீர் ஒப் பந்தத்தை அமல்படுத்துவ தற்காக இரு நாடுகளும் சிந்து நதி ஆணையர்களை நிய மித்துள்ளன. இந்த ஆணை யர்களின் கடைசி சந்திப்பு  மே 2022 இல் தில்லியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஜனவரி 2023 முதல் ஒப்பந் தத்தை திருத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளைத் துவங்க இந்தியா பாகிஸ்தா னுக்கு 4 முறை கடிதம் எழுதி யுள்ளது என்றும் அக்கடி தத்திற்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.