மும்பை, செப். 3- ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற மோடி அரசின் நகர்வு முற்றிலும் ஜன நாயகவிரோதமானது; நடைமுறை சாத்தியமில்லாதது; ஏராளமான குழப்பங்ங்களுக்கு இட்டுச் செல்லக்கூடியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள் ளார். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கருத்தினை ஒன்றிய பாஜக அரசு திட்ட மிட்டு அரசியல் களத்தில் விதைத்துள் ளது. மோடி அரசின் இந்த ஆபத்தான நகர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலையில் மும்பையில் நடை பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி யில் பங்கேற்ற சீத்தாராம் யெச்சூரி, “ஒன்றிய மோடி அரசு, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தினை செயல் படுத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலை யில், அக்கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல் என்னவென்று இதுவரை அறி விக்கப்படவில்லை; அதற்கு முன்பே ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆராய் வதற்கு ஒரு குழு அமைத்திருப்பது மற்றும் ஆளும் அரசுத் தரப்பிலிருந்து அதற்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை பரப்புவது என்பது, இத்திட்டத்தை செயல்படுத்தும் அரசின் நோக்கத்தையே பிரதிபலிக்கிறது. இந்தியா போன்ற நாட்டில் இத்திட்டம் நடைமுறை சாத்தியமில்லாதது” என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
இந்திய நாட்டில் அனைத்து மாநிலங்களிலுமே ஒரு தனிப்பட்ட கட்சி மிகப்பெரும் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சிக்கு வருவது என்பது கிட்டத்தட்ட பழைய கதை யாகிவிட்டது. இந்த நிலையில், தேர்த லின் போது தொங்கு நாடாளுமன்றம், தொங்கு சட்டமன்றம் அமைந்தாலோ அல்லது ஒரு தனிக்கட்சி பெரும்பான் மை பெற முடியாமல் போனாலோ, இவர்கள் சொல்லும் திட்டத்தின்படி மிகப்பெரிய பிரச்சனைகளும் குழப்பங்களும் ஏற்படும். ஒரு கட்சி, கொள்கை பிரச்சனை காரணமாகவோ அல்லது இதர காரணங் களுக்கோ அரசாங்கத்திற்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டால், அதற்கு பிறகு அடுத்த தேர் தல் நடைபெறும் வரை, எந்தக் கூட்டணியிலும் இணைய முடியாமல் அல்லது தங்களது கொள் கைக்கு பொருத்தமான அணி சேர்க்கையை மேற்கொள்ள முடியா மல் தனித்தே நிற்க வேண்டிய நிலை ஏற்படும். சில தருணங்களில் ஆதரவளிக் கும் கட்சி வாபஸ்பெறும்நிலையில், ஆட்சிக்கவிழுமானால் அங்கு குடி யரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப் படுமா அல்லது பெரும்பான்மை இழந்த அரசாங்கமே அடுத்த தேர்தல் வரை அதிகாரத்தில் நீடிக்குமா என்ற கேள்விகள் எல்லாம் எழுகின்றன. ஜனநாயகத்தில் மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அதிகாரத்தை கையில் வைத்திருக்க முடி யும்.
ஆனால் மேலே குறிப்பிட் டது போன்ற சூழல் ஏற்படும்பட்சத்தில், அடுத்த தேர்தலுக்கான காலம் வரை காத்திருங்கள் என்று கூறி மத்தியில் ஆளும் கட்சியே மாநிலத்தின் அதி காரத்தை குடியரசுத் தலைவர் ஆட்சி மூலமாக தனது கைகளில் எடுத்துக் கொள்ளும் மிகப்பெரும் ஆபத்துக்கள் அடங்கியுள்ளன. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது தேர்தல் செலவினங்களை குறைப்ப தற்காக முன்வைக்கப்படுகிறது என்ற ஒன்றிய அரசின் வாதம் நிராகரிக்கப் பட வேண்டியது ஆகும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார். இதைத்தொடர்ந்து அவர் வெளி யிட்ட டுவிட்டர் பதிவில், “நாடாளு மன்றம் அல்லது சட்டமன்றங்களில் ஒரு அரசு தனது பெரும்பான்மையை இழந்துவிட்டது, ஆட்சியில் தொடர்வது என்பது சட்டவிரோதமானது. அதே போல, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்கி, ஒரு தேர்ந் தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பெற்றி ருப்பதற்கான மக்களின் உரிமையை மறுப்பது என்பது ஜனநாயக விரோத மானது” என்று குறிப்பிட்டுள்ளார்.