ஜார்க்கண்ட் முன்னாள் முதல் வரும், பாஜக மூத்த தலைவரு மான ரகுபர் தாஸ் தற்போது ஒடிசா ஆளு நராக உள்ளார். இவர் கடந்த வாரம் ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியி டும் தனது மருமகள் பூர்ணிமா தாஸ் சாஹுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதி வேட்பாளருமான அஜோய் குமார், “ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் தனது பதவியின் மாண்பை புறக்கணித்து, விதிகளை மீறி பிரச்சாரம் செய்துள்ளார்” என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார். அந்த புகார் கடிதத்தில், “ஒன்றிய அர சுக்கும் மாநிலத்துக்கும் இடையே பால மாகவும், பக்கச்சார்பற்ற ஆட்சியை உறுதி செய்வதற்காகவும் அரசியலற்ற நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதே ஆளுந ரின் பணியாகும். ஆனால் ஒடிசா ஆளுந ராக இருக்கும் ரகுபர் தாஸ் தனது பத வியை மறந்து ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கிறார். இது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். எவ்வாறாயினும் ரகுபர் தாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் செயல் அரசியலமைப்பு விதிகளை மீறு வது ஆகும்” என அதில் கூறப்பட்டுள்ளது.